Skip to main content

“தொடர்பை விட்டுடுன்னு சொன்னோம்... கேட்கல, அதான் கொன்னுட்டோம்” - பரபரப்பு வாக்குமூலம்      

Published on 22/07/2023 | Edited on 22/07/2023

 

youth who incident a friend along with an accomplice

 

சேலம் அருகே, நண்பனின் மனைவியுடனான திருமணத்தை மீறிய  உறவைக் கைவிடுமாறு கூறியும் மறுத்ததால் பெட்ரோல் நிலைய ஊழியரைக் கொலை  செய்தோம் எனப் பிடிபட்ட 5 பேர் கும்பல் காவல்துறையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.    

 

சேலத்தை அடுத்த திருமலைகிரியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் (22). கொண்டலாம்பட்டி அருகே உள்ள பெரிய புத்தூரைச் சேர்ந்தவர் அரவிந்த் (21). இவர், அங்குள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்து வந்தார்.  அரவிந்த்தும், மனோஜ்குமாரும் நெருங்கிய நண்பர்கள். இதனால் மனோஜ்குமார் வீட்டிற்கு அரவிந்த் அடிக்கடி சென்று வந்தார். அப்போது  அவருடைய மனைவியுடன் அரவிந்த்துக்கு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. மனோஜ்குமார் வீட்டில் இல்லாத நேரங்களில் அவருடைய  மனைவியும், அரவிந்த்தும் ரகசியமாகச் சந்தித்து தனிமையில் இருந்துள்ளனர்.     

 

இதை அறிந்த மனோஜ்குமார், தனது நண்பரையும் மனைவியையும் கண்டித்துள்ளார். அதைப் பொருட்படுத்தாத அவர்கள் மீண்டும் ரகசியமாகச் சந்தித்து உறவை வளர்த்து வந்துள்ளனர். அரவிந்த் உயிருடன் இருக்கும் வரை தன்னால் மனைவியுடன் சந்தோஷமாக வாழ முடியாது என முடிவு செய்த மனோஜ்குமார், அவரைத்  தீர்த்துக்கட்ட திட்டமிட்டார். இதற்காக அவர், பெரிய புத்தூரைச் சேர்ந்த தனது கூட்டாளிகள் கவுரிசங்கர் (25), ராமச்சந்திரன் (26), ரத்தினம் (33), கார்த்தி (21) ஆகியோரின் உதவியை நாடினார். அவர்களும் மனோஜ்குமாரின் திட்டத்துக்கு உதவுவதாக ஒப்புக்கொண்டனர்.     

 

இதையடுத்து, ஜூலை 18ம் தேதி இரவு 8 மணியளவில், அரவிந்த்தை மது குடிப்பதற்காக மனோஜ்குமாரும் கூட்டாளிகளும் அழைத்துள்ளனர். அழைப்பை ஏற்று அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்ற அரவிந்த்திடம், இனிமேல் மனோஜ்குமாரின் மனைவியைச் சந்திக்கவோ, பேசவோ கூடாது என மிரட்டியுள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது. அப்போது மனோஜ்குமாரும், கூட்டாளிகளும் இரும்பு ஆணிகள் பதிக்கப்பட்ட மரக்கட்டையால் அரவிந்த்தை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். நிலைகுலைந்த அவர், அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தார். துரத்திச்சென்ற அந்த கும்பல், சரமாரியாகத் தாக்கியதில் அரவிந்த் அங்கேயே மயங்கி விழுந்தார்.     

 

நிகழ்விடத்தில் இருந்த சிலர் அரவிந்த்தை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி,  ஜூலை 19ம் தேதி இரவு அவர் உயிரிழந்தார். ஆரம்பத்தில் இச்சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி வழக்காகப் பதிவு செய்திருந்த கொண்டலாம்பட்டி காவல்நிலைய காவல்துறையினர், அரவிந்த்தின் மரணத்திற்குப் பிறகு கொலை வழக்காக மாற்றம் செய்து விசாரித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மனோஜ்குமார், கவுரிசங்கர், ராமச்சந்திரன், ரத்தினம், கார்த்திக் ஆகிய 5 பேரைக் கைது செய்தனர். மனோஜ்குமாரின் மனைவியுடனான தொடர்பை விட்டுவிடுமாறு கூறியதாகவும், அதற்கு அரவிந்த் மறுத்ததால் போட்டுத்தள்ளி விட்டதாகப் பிடிபட்ட நபர்கள்  கூறியுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.