Skip to main content

சென்னையில் பரபரப்பு; இளைஞர் கடத்திக் கொலை

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Youth abducted and incident in Poonamallee, Chennai

சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, ஆறுமுகம் தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன்(என்ற)கருக்கா ஸ்டீபன்(22). நேற்று முன்தினம்(7.3.2024) வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். வீட்டின் அருகே வந்தபோது மர்ம நபர்கள் ஸ்டீபனை காரில் கடத்தி சென்றனர். இதனை கண்டதும் அவரது பெற்றோர் நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். நசரத்பேட்டை போலீசார் ஸ்டீபனை கடத்தி சென்ற நபர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த நிலையில் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலை, மலையம்பாக்கம் பகுதியில் உள்ள காலி இடத்தில் ஸ்டீபன் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக வந்த தகவலையடுத்து நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசாரை கண்டதும் அங்கிருந்து இரண்டு பேர் கத்தியுடன் தப்பி ஓடியுள்ளனர். மேலும் கொலை செய்யப்பட்டு கிடந்த ஸ்டீபன் உடல் அருகே போதையில் மயங்கி கிடந்த விக்னேஷ், ஈசாக் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். 

இந்த கொலை சம்பவத்தில் மலையம்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ்(22), அன்பு(21), ஈசாக்(23), மற்றும் 17 வயது சிறுவன் உட்பட ஐந்து பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் விக்னேஷ் தரப்புக்கும், ஈசாக் தரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இரு தரப்பினரும் அடிக்கடி மாறி, மாறி தாக்கிக் கொண்ட சம்பவமும் அரங்கேறி இருந்தது. 

கடந்த சில மாதங்களாக மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு விக்னேஷ் நண்பரான பிரவீன் என்பவரின் செல்போனை ஸ்டீபன் பிடுங்கி கொண்டு அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் அதிகமானது இதனால் ஸ்டீபனை தீர்த்து கட்ட முடிவு செய்த ஈசாக் தரப்பினர், அதிக போதையில் காரை வாடகைக்கு எடுத்து கொண்டு ஸ்டீபனை காரில் கடத்தி சென்று மலையம்பாக்கம் பகுதியில் வைத்து கொலை செய்ததும், கொலை செய்த பிறகு அதிக போதையில் இருவர் இருந்ததால் தப்பிச் செல்ல முடியாமல் போலீசாரிடம் சிக்கிக் கொண்டதும் தெரியவந்தது. 

அவர்களிடமிருந்து போதை ஊசிகள் சிலவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தற்போது கொலைக்கு பயன்படுத்திய கத்தி, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், இந்த கொலை சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பது குறித்தும் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

திக் திக் நொடிகள்... சென்னையை கலங்கடித்த சம்பவம்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Tick-tick seconds... a child saved by tact

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன்-ரம்யா தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இன்று காலை குழந்தையின் தாய் ரம்யா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது கை தவறி குழந்தை நான்காவது மாடியில் இருந்து இரண்டாவது தளத்தில் உள்ள வெளிப்புற கூரை மீது விழுந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டனர். கீழே பெட்ஷீட் போன்றவை விரிக்கப்பட்டு குழந்தை விழுந்தால் பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திக் திக் நொடிகளை கடந்து அந்த பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். காப்பாற்றப்பட்ட குழந்தையானது உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.