Skip to main content

காவல்நிலையத்தில் மெய்சிலிர்க்க வைத்த காட்சி... மக்கள் மத்தியில் பாராட்டு... 

Published on 21/02/2020 | Edited on 21/02/2020

 

கடலூர் இருசப்பன் செட்டி தெருவில் வசிக்கும் சந்திரசேகர் மனைவி C. மலர் என்பவர் கடந்த வாரம் 10.02.2020 அன்று குடும்ப செலவுக்காக அவரது ஏடிஎம் மிஷினில் 5000 பணம் எடுத்து கொண்டு கடலூர் கேவி டெக்ஸ் ஜவுளி கடை அருகில் செல்லும்போது ஏடிஎம் மற்றும் பணம் தொலைந்துவிட்டது. 


 

Cuddalore



 

அந்த வழியாக சென்ற கடலூர் OT காவல்நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு காவல்துறை உதவி ஆய்வாளர் எஸ். அருள்பிரகாசம் அவர்கள் கீழே கடந்த 5,000 பணமும் ATM ம் கார்டையும் கைப்பற்றி ஒரு வார காலமாக தொலைந்த நபரிடம் கொடுக்க முயற்சி செய்தார். பல பேரிடம் சொல்லி வைத்தார்.

 


அந்த வகையில் தகவல் கிடைத்து மலர் என்பவர் 20.02.2020 மாலை 7.30 மணி அளவில் உடனே OT காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆகாஷ் அவர்களை நேரில் சந்தித்து முறையிட்டார். அப்பொழுது ஆகாஷ் உதவி ஆய்வாளர் விசாரணை செய்தபோது, சிறப்பு உதவி ஆய்வாளர் அருள்பிரகாசமிடம் இருப்பதாக தகவல் தெரிந்து 5000 பணத்தையும் ATM, OT காவல்நிலையத்தில் C.மலரிடம் ஒப்படைத்தார்கள் காவல்துறைக்கு மலர் நன்றி தெரிவித்தார். அருள் பிரகாசத்தை ஆகாஷ் அவர்கள் நெஞ்சார பாராட்டினார்.



 


 

சார்ந்த செய்திகள்