நடிகர் ரஜினிகாந்த் 2021 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக வேண்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ் மற்றும் ரசிகர்கள் சிறப்பு யாகம் நடத்தினர்.
இந்த யாகம் ரஜினிகாந்த் நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டியும், அடுத்த சட்டமன்ற தேர்தலில் ரஜினி வெற்றிபெறவும் நடத்தப்பட்ட யாகம் என கூறப்படுகிறது.