Skip to main content

தனிமைச்சிறையிலிருந்து ஆம்புலன்ஸில் தப்பிக்க முயன்ற பெண்... வழக்குப்பதிவு செய்த போலீஸ்!

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பிய பெண் தன்னுடைய இரு குழந்தைகளுடன் போலீஸாரை ஏமாற்றி ஆம்புலன்ஸ் மூலம் விராலிமலையிலிருந்து ராமநாதபுரத்திற்கு செல்ல முயற்சிக்கையில், ஆம்புல்ன்ஸை விரட்டி சேஸிங் செய்து மடக்கி பிடித்து மூவரையும் தங்களது பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர் திருவாடனை உட்கோட்டப் போலீசார்.

 

 Woman trying to escape from an ambulance in private ...

 

கரோனா வைரஸ் தொற்று நோய்க் காரணமாக வெளிநாட்டினர், வெளிநாட்டிலிருந்து திரும்பியோர், அவர்களுடனான தொடர்பிலிருந்தவர்களை தீவிரமாக கண்காணித்து தங்களது மருத்துவ பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளன மத்திய மாநில அரசுகள். மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்ட கண்காணிப்பு போக, ஏனையோர் அவர்களுடைய வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவக் கண்காணிப்பின் காலமாக 28 நாட்களிலிருந்து 14 நாட்கள் வரை என வரையறைப்படுத்தியுள்ளது அரசு. இது இப்படியிருக்க, மருத்துவக்கண்காணிப்பிலுள்ள சிலர், கரோனா பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் மருத்துவ கெடுபிடிகளுக்கு பயந்து எஸ்கேப்பாகியதும் உண்டு. இந்நிலையில், 28ம் தேதி இரவில் சிவகங்கை - ராமநாதபுர மாவட்ட எல்கையான கருமொழி சோதனை சாவடியில் ராமநாதபுர மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவின் இன்ஸ்பெக்டர் இளவேனில், திருவாடனை காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ.சுல்தான் இப்ராஹிம் மற்றும் திருப்பாலைக்குடி காவல்நிலையத்தினை சேர்ந்த போலீஸ் முத்து ஆகியோர் பாதுகாப்பில் இருந்தபொழுது TN55-BB-8448 என்ற பதிவெண் கொண்ட வெள்ளை நிற ஆம்னி வகை ஆம்புலன்ஸை சோதனைக்காக நிறுத்தியுள்ளனர். மருத்துவ சிகிச்சைக்காக விராமலையிலிருந்து ராமநாதபுரம் ஒருவரும், திருச்சியிலிருந்து ராமநாதபுரம் ஆம்புலன்ஸிலுள்ளவர்கள் முன்னுக்குப் பின் முரணாக கூறிக் கொண்டிருந்த வேளையில், " அது டிஎஸ்பி-க்கு சொந்தமான வண்டி" என டிஎஸ்பி அலுவலகத்திலிருந்து ஒருவர் பேசுவதாக எஸ்எஸ்ஐ-க்கு தகவல் வர, அந்த ஆம்புலன்ஸ் அங்கிருந்து பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அடுத்த பதினைந்து நிமிடத்திற்குள் அந்த ஆம்புலன்ஸை சேஸிங் செய்து மடக்கி பிடித்து போலீசார் திருவாடனை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

 

 Woman trying to escape from an ambulance in private ...


 "அந்த ஆம்புலன்ஸை விடுவிக்க ஒன்றிற்கும் மேற்பட்ட டிஎஸ்பி ராங்க் அதிகாரிகள் பேசியதும், வாகனத்திற்குள் இருந்த அவர்களின் தோற்றமும் எங்களுக்கு சந்தேகம் வலுக்கவே மடக்கி பிடித்து விசாரித்தோம். அந்த ஆம்புலன்ஸிற்குள் இருந்த பெண்ணின் பெயர் லதா(பெயர்மாற்றப்பட்டுள்ளது). உடனிருந்தது அவருடைய 11 வயது மகள் மற்றும் 8வயது மகனுமே.!!! சமீபத்தில் தான் அபுதாபியிலிருந்து சென்னைக்கு திரும்பியிருக்கின்றார்கள். சென்னை பம்மலில் உள்ள வீட்டில் இவர்கள் கரோனா தொற்றுக்காக தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அங்கிருந்து தப்பி விராலிமலை வந்து அங்கிருந்து ஆம்புலன்ஸில் ராமநாதபுரத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல முயன்றிருக்கின்றார். இதற்காக ஒவ்வொரு செக்போஸ்டிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரியும்  ஒரு டிஎஸ்பியின் பெயரைக் கூறி தப்பியிருக்கின்றார்.அது இங்கேயும் கூறப்பட இப்பொழுது சிக்கியுள்ளார். ஆம்புலன்ஸின் உரிமையாளர், டிரைவர் உட்பட அனைவரின் மீதும் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது." என்கின்றனர் திருவாடனை போலீசார். மருத்துவப் பரிசோதனையின் முடிவில் பெண் குழந்தைகள் உட்பட மூவருக்கும் கரோனா தொற்று இல்லை எனினும் 28 நாள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக்கண்காணிப்பில் இருக்கவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.


எனினும், புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரியும் அந்த டிஎஸ்பி பெயரைக் கூறி ஆம்புலன்ஸில் தப்பிக்க முயன்ற பெண் சென்னையிலிருந்து விராலிமலைக்கு வந்தது எப்படி..? சட்டத்தினை மீறி இவர்களுக்கு எதற்காக டிஎஸ்பி உதவவேண்டும்..? இன்னும் எத்தனை நபர்களை அவர் அனுப்பியிருக்கக்கூடும்..?" என பல கேள்விகளுடன் டிஎஸ்பியின் தரவுகளை ஆராய்ந்து வருகின்றது ராமநாதபுர மாவட்ட காவல்துறை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.