Skip to main content

புகழ்பெற்ற கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடக்குமா? - குழப்பத்தில் பக்தர்கள்..! 

Published on 10/04/2021 | Edited on 10/04/2021

 

Will the famous Kuttandavar temple festival take place? .. Devotees in confusion

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் (முன்பு விழுப்புரம் மாவட்டம்) உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கூவாகம் கூத்தாண்டவர் கோவில். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பௌர்ணமி அன்று அரவான் களப்பலி திருவிழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். இந்த கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் திருவிழா தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு இருந்தே திருநங்கைகள் வருவது வழக்கம்.

 

அதிலும் தமிழகம் மற்றும் இந்திய அளவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும், அயல் நாடுகளில் இருந்தும் திருநங்கைகள் அலையலையாக இந்த திருவிழாவில் வந்து கலந்து கொள்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா மிக விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வந்தது. இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் துவக்க நாள் முதல் 7 கிராம மக்கள் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடத்துவார்கள். பிறகு சாகை வார்த்தலுடன் விழா நடக்கும் இக்கோவிலுக்கு திருநங்கைகள் பொதுமக்கள் என லட்சக்கணக்கில் கூடுவார்கள்.

 

Will the famous Kuttandavar temple festival take place? .. Devotees in confusion

 

திருவிழா ஆரம்பிப்பதற்கு இரு நாட்களுக்கு முன்பே திருநங்கைகளுக்கு அழகிப் போட்டிகளும், அறிவுத்திறன் போட்டிகளும் நடத்தப்பட்டு திறமையான திருநங்கைகளுக்கு பரிசுகள் வழங்கப்படுவது உண்டு. இவர்களை காண வேண்டும் என்ற ஆவலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இளைஞர்கள் கூட்டம் கூவாகத்தில் மொய்க்கும். திருநங்கைகள் அலங்காரத்தில் தேவலோக மங்கைகளை போல அலங்கரித்து வருவார்கள். அவர்களோடு இளைஞர்கள் செல்ஃபி எடுப்பதும் அவர்களிடம் கொஞ்சி விளையாடுவதும் எனத் திருவிழா களைகட்டும்.

 

இளம் காளையர்களின் வருகையால் திருவிழா கொண்டாட்டமாக இருக்கும். திருநங்கைகளைப் படம் பிடிப்பதற்காக பத்திரிகையாளர்கள், ஊடகத்தினர் ஆயிரக்கணக்கில் திரண்டு வருவார்கள். அப்படிப்பட்ட பிரமாண்ட திருவிழா கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக நடைபெறாமல் நிறுத்தப்பட்டது. அதே போன்று இந்த ஆண்டும் திருவிழா நிறுத்தப்படுமா, நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம் தமிழக அரசு இன்று 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கோவில்களில் திருவிழாக்கள் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

 

Will the famous Kuttandavar temple festival take place? .. Devotees in confusion

 

இதனால் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடக்குமா அல்லது ரத்து செய்யப்படுமா என்று திருநங்கைகள் மற்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இது சம்பந்தமாக அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் திருவிழா ரத்து செய்வது குறித்து உயர் அதிகாரிகளிடம் இருந்து முறையான உத்தரவு எதுவும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை என்றனர். மேலும் அரசு திருவிழாவை ரத்து செய்யுமா என்பது குறித்து இனிமேல்தான் தெரியவரும் என்கிறார்கள். கரோனா நோய் இரண்டாவது அலைவரிசை பரவல் காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

 

அதனால் இந்த ஆண்டும் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா நடத்தப்படுவது சந்தேகத்திற்கிடமாக உள்ளது என்று மக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. தற்போது கரோனா பரவல் காரணமாக கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லணை கால்வாய்க்கரை வீரமாகாளியம்மன் கோயில் முளைப்பாரித் திருவிழா!

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Kallanai Canal Bank Veeramakaliamman Temple Mulaipari Festival

தை முதல் நாளில் தொடங்கும் திருவிழாக்கள் கிராமங்களில் களைகட்டி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாசிமகத் திருவிழா கிராம மக்களை குதூகலப்படுத்தியது. அதிலும் புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள ஆசியாவில் உயரமான குதிரை சிலை கொண்ட பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் மாசிமகத் திருவிழாவில் லட்சம் பேர் திரண்டிருந்தனர். ஆட்டம், பாட்டமும், சர்க்கஸ் கலை நிகழ்ச்சிகளும் பஞ்சமில்லாமல் நடந்தது.

Kallanai Canal Bank Veeramakaliamman Temple Mulaipari Festival

அதே போல தான், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் கல்லணைக் கால்வாய் ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. காப்புக் கட்டியதும் ஒவ்வொரு வீட்டிலும் விரதமிருந்து மண் சட்டிகள், உட்பட பல்வேறு பாத்திரங்களில் நவதானிய விதைகள் தூவி வீட்டுக்குள்ளேயே வைத்து சிறப்பு வழிபாடுகளுடன் வளர்த்து வந்த முளைப்பாரியை தாரை தப்பட்டை முழங்க வான வேடிக்கைகளுடன் கிராம மக்கள் நேற்று ஊர்வலமாக தூக்கிச் சென்று, மண்ணடித் திடலைச் சுற்றி ஒன்று சேர்ந்து கல்லணைக் கரையோரம் உள்ள பெரிய குளத்தில் விட்டனர். 

மேலும் முளைப்பாரியுடன் கொண்டு வந்த படையல் பொருட்களை ஒரே இடத்தில் குவித்து வைத்து படையலிட்டு வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story

வீடு புகுந்து பெண்கள் மீது தாக்குதல்; செக்காவூரணியில் பரபரப்பு

Published on 19/10/2023 | Edited on 19/10/2023

 

Conflict between two factions at the festival; Home invasion; There is excitement in Chekkavuran

 

மதுரை செக்காவூரணி கோவில் திருவிழாவில் இரண்டு தரப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு தரப்பினர் குறிப்பிட்ட நபரின் வீட்டைத் தாக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

மதுரை மாவட்டம் செக்காவூரணி அடுத்துள்ள புளியங்குளம் கிராமத்தில் உள்ள வடக்கத்தி அம்மன் கோவிலில் புரட்டாசி உற்சவ திருவிழா கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த திருவிழாவின் பொழுது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு பிரிவைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றொரு பிரிவைச் சேர்ந்த இளைஞர்களின் வீடுகளை அடித்து நொறுக்குவதோடு பெண்களைத் தாக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

இந்த சம்பவம் குறித்து செக்காவூரணி காவல் நிலைய போலீசார், சமூக வலைத்தளங்களில் வெளியான அந்த வீடியோவை ஆதாரமாக வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் பத்துக்கும் மேற்பட்டோரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.