Skip to main content

புளூசட்டை மாறனின் படத்துக்கு சென்சார் கிடைக்குமா? கோர்ட்டில் சரமாரியான கேள்வி!

Published on 03/09/2021 | Edited on 03/09/2021

 

Will the  Blue Shirt  Maran get censored for 'Anti Indian' movie?

 

‘ஆன்டி இண்டியன்’ திரைப்படம் தொடர்பான வழக்கின் விசாரணையில் சரமாரியாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். 

 

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய விமர்சகர் என அறியப்பட்ட புளூ சட்டை மாறன் என்பவர் ஆன்டி இண்டியன் எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தைத் தயாரித்திருப்பவர் ஆதம்பாவா. படம் முழுமையடைந்த பிறகு சென்சாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர், படத்திற்குத் தடை விதித்தனர். இதனை எதிர்த்து பெங்களூரில் இருக்கும் ரிவைசிங் கமிட்டிக்குப் படத்தை கொண்டு சென்றார் ஆதம்பாவா. தடை விதிக்கப்பட்டதற்கான காரணங்கள் ஏற்புடையதில்லை என்றும், கருத்து சுதந்திரத்திற்கு எதிராக சென்சார் குழுவினர் இயங்குவதாகவும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து ரிவைசிங் கமிட்டியிடம் விரிவாக எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது. 

 

படத்தைப் பார்த்த 10 பேர்கள் கொண்ட ரிவைசிங் கமிட்டியினர், “மிகவும் துணிச்சலான பல காட்சிகளை எதார்த்தமாக வைத்திருக்கிறீர்கள். படம் நன்றாக இருக்கிறது. ஆனால், சில விசயங்களை காம்ப்ரமைஸ் பண்ணினால் படத்தை ரிலீஸ் செய்வதில் எந்த சிக்கலும் இருக்காது” என்று சொன்னார்கள்.

 

"குறிப்பாக, மத ஒற்றுமையைச் சீர்குலைக்கிற மாதிரி டைட்டில் இருப்பதால் அதனை முதலில் மாற்றுங்கள்;  கபாலின்னு ஒரு கேரக்டரைப் பற்றி படத்தில் பேசப்படுகிறது. கபாலின்னா, அது நடிகர் ரஜினியை குறிப்பதாகத் தெரிகிறது. அந்த பெயரை மாற்றுங்கள்” என்பது உள்பட சில விசயங்களை சொன்னது ரிவைசிங் கமிட்டி. இதற்கு தயாரிப்பாளர் தரப்பிலிருந்து, “கபாலிங்கிறது குறிப்பிட்ட எவரையும் குறிப்பிடுவதில்லை. ரஜினிகாந்த்துக்கும் கபாலிக்கும் சம்பந்தமில்லை. அவர் நடிக்கும் கேரக்டர்கள் பெயர்தான் பல படங்களின் தலைப்பாகவே இருந்துள்ளது. அதற்காக அந்த பெயர்களை பயன்படுத்தவே கூடாது எனச் சொல்வது சரி இல்லைதானே?” என்கிற ரீதியில் வாதாடினார்கள். 

 

அதேபோல, ராஜா என்று ஒரு பெயர் வருகிறது. அது, பாஜகவில் உள்ள ராஜா என்பவரைக் குறிக்கிறது. அதனையும் மாற்றுங்கள் என்றனர். இப்படி தேவையற்ற பல்வேறு விஷயங்களைச் சுட்டிக்காட்டி ரிவைசிங் கமிட்டிப் பேசியது. படத்தை வெளியிடக் கூடாது என்கிற கண்ணோட்டத்தில் ரிவைசிங் கமிட்டி இருப்பதாகத் தெரிந்தது. இதனால் அந்த படத்துக்கு ரிவைசிங் கமிட்டியிலும் சென்சார் கிடைக்கவில்லை.

 

இதனை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் தயாரிப்பாளர். அந்த வழக்கின் விசாரணை இன்று நீதிமன்றத்தில் வந்த போது, வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “ஒரு திரைப்படத்தின் மூலம் காட்சிப்படுத்துவது அடிப்படை உரிமை. அந்த வகையில், கமிட்டி தனது தனிப்பட்டப் பார்வையை படத்தின் தயாரிப்பில் திணிக்க முடியாது. கபாலி என்ற பெயரை ஏன் பயன்படுத்தக் கூடாது? ஒரு நடிகரை குறிப்பிடுவதாக சொல்வது என்பது சரி அல்ல. முட்டாள் தனமாக இருக்கிறது. சென்சார் சர்டிஃபிகேட் கேட்டு தொடரப்பட்டுள்ள இந்த மனுவுக்கு இரண்டு வாரத்தில் கமிட்டி தனது பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்” என்று சொல்லி வழக்கின் விசாரணையைச் செப்டம்பர் 17-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

31 வது முறையாக நீட்டிப்பு; நீதிமன்றம் அதிரடி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Extension for the 31st time; Court action

போக்குவரத்துத்துறையில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்  இன்று நடைபெற்ற விசாரணைக்கு பிறகு மேலும் 15 நாட்களுக்கு செந்தில் பாலாஜிக்கான நீதிமன்ற காவலை 31 ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.