Skip to main content

காணாமல்போன கணவர்கள்; பரிதவிக்கும் மனைவிகள்!    

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

Wifes complains that three husbands are missing in Virudhunagar district

 

விருதுநகர் பஜார் காவல்நிலைய லிமிட்டில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் வசிக்கிறார் பானுமதி (வயது 52). இவருடைய கணவர் புகழேந்தி (வயது 57) யமஹா ஷோ ரூமில் வாட்ச்மேன் வேலை பார்க்கிறார். தங்களுடைய மகனுக்கும் மகளுக்கும் திருமணம் செய்துவைத்து பெற்றோர் கடமையை முடித்துவிட்ட நிலையில், மகனும் மகளும் தனித்தனி குடும்பமாக வாழ்கின்றனர். 

 

இந்நிலையில், புகழேந்தியும் பானுமதியும் தங்களது வீட்டில் சண்டையும் சச்சரவுமாக வாழ்ந்துள்ளனர். அதனால், கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டுச் செல்வதும் திரும்புவதும் பானுமதியின் வழக்கமாக இருந்துள்ளது. அன்று நல்ல தண்ணீர் வந்துள்ளது. யார் நல்ல தண்ணீர்  பிடிப்பது என்பதில்  கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் தகராறாகி,  “நான் அம்மா வீட்டுக்குப் போகிறேன்.” என்று பானுமதி கூற, புகழேந்தியோ “நீ எங்கும் செல்லவேண்டாம். நானே வீட்டை விட்டுச் செல்கிறேன்.” என்று கட்டைப் பையில் துணிகளை எடுத்துக்கொண்டு போய்விட்டார். எங்கு தேடியும் புகழேந்தி கிடைக்காத நிலையில், விருதுநகர் பஜார் காவல்நிலையத்தில் கணவரைக் காணவில்லை என்று பானுமதி புகாரளித்துள்ளார்.   

 

திருத்தங்கல் காவல்நிலைய லிமிட்டில் உள்ள சத்யா நகரில் பஞ்சவர்ணம் (வயது 42) வசிக்கிறார். கடந்த 18-ஆம் தேதி, இவருடைய கணவர் தர்மராஜ் (வயது 53) தனது நண்பர்களுடன் காசிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பியிருக்கிறார். 21-ஆம் தேதி காலை 10 மணியளவில் நக்ரி என்ற இடத்தில் ரயிலில் இருந்து இறங்கிய தர்மராஜ் காணாமல் போய்விட, அவருடன் சென்ற பாண்டி, பஞ்சவர்ணத்துக்கு தகவல் சொல்கிறார். இதற்கிடையே, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தர்மராஜை அருகிலுள்ள வருரா காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதையறிந்த பஞ்சவர்ணம், கணவர் தர்மராஜை அழைத்துவர கார் புக் செய்துள்ளார். அந்தக் காரில் வரும்போது, தன்னை யாரோ கடத்திச் செல்வதாக நினைத்த தர்மராஜ், தெலங்கானா மாநிலம், மியாபூரில் இறங்கி ஓடி, காணாமல் போய்விடுகிறார். அந்த காரின் டிரைவர், தர்மராஜ் காணாமல் போன மியாபூர் லொகேஷனை பஞ்சவர்ணத்துக்கு ஷேர் செய்திருக்கிறார். மியாபூரில் தொலைந்த கணவர் தர்மராஜை கண்டுபிடிக்கும்படி, திருத்தங்கல் காவல் நிலையத்தில் பஞ்சவர்ணம் புகார் செய்திருக்கிறார்.      

 

மல்லி போலீஸ் லிமிட்டில் உள்ள கம்மாபட்டியில் வசிக்கிறார் பிரபாகரன் (வயது 23). இவருடைய அக்கா புவனேஸ்வரி (வயது 25) பட்டப் படிப்பு முடித்து வீட்டில் இருந்துள்ளார். கடந்த 24-ஆம் தேதி இரவு,  அம்மா, அப்பாவுடன் தூங்கிக்கொண்டிருந்த புவனேஸ்வரி, அதிகாலை 3 மணியளவில் காணாமல் போய்விட்டார். திருமணச் செலவுகளுக்காக வீட்டில் வைத்திருந்த ரூ.50000-ஐயும் எடுத்துச் சென்றுவிட்டார். தனது அக்கா புவனேஸ்வரியைக் கண்டுபிடித்துத் தரும்படி மல்லி காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார் பிரபாகரன். காணாமல் போனவர்களால் மண்டை காய்ந்து பரிதவிப்பது சம்பந்தப்பட்ட  குடும்பத்தினர் மட்டுமல்ல, வழக்குப்பதிவு செய்த காவல்நிலையங்களும்தான்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

முன்னாள் பிரதமரின் பேரன் மீது பாலியல் புகார்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
complaint against the grandson of the former prime minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமைய தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கத்தில், “பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஹாசன் மாவட்டத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகள் பரவி வருகின்றன. இந்நிலையில், எஸ்ஐடி விசாரணை நடத்துமாறு அரசுக்கு மகளிர் ஆணையத் தலைவர் கடிதம் எழுதியிருந்தார். எனவே இந்தக் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா மீண்டும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.