Skip to main content

காதலுக்காக கணவனை உணவில் விஷம் வைத்து கொன்ற மனைவி - ஒன்றரை வயது குழந்தை தவிப்பு

Published on 15/12/2018 | Edited on 15/12/2018
arrest


   


காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை உணவில் வி‌ஷம் கலந்து கொலை செய்துள்ளார் மனைவி. இந்த சம்பவம் தேனி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்த சுருளிபட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன். 27 வயதான இவர் லாரி டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி கலைமணி (வயது 19) என்ற மனைவியும், ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகி நல்லப்படியாக குடும்பம் நடத்தி வந்த ஈஸ்வரன் திடீரென கடந்த மாதம் 8ஆம் தேதி இறந்து போனார். 

 

கணவர் இறந்த பிறகு தனது குழந்தையை மாமனார் தர்மரிடம் கொடுத்தவிட்டு திடீரென தலைமறைவானார். இரவு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. வீட்டில் இருந்த 3 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் பணத்தையும் காணவில்லை. இதையடுத்து உறவினர்கள் பல இடங்களில் தேடினர். 

 

மருமகளை காணவில்லை என்றும், பல இடங்களில் மருமகளை தேடிபார்த்தபோது, ஒரு வாலிபருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டு பல இடங்களுக்கு அவர் தனியாக சென்றுள்ளார் என தெரிய வந்ததாக ராயப்பன் பட்டி காவல்நிலையத்தில் புகார் கூறியுள்ளார். மேலும், மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதால் ஈஸ்வரனின் உடலை தோண்டி எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

 

அதன் பேரில் டி.எஸ்.பி. சீமைச்சாமி, தாசில்தார் உதயராணி, டாக்டர் அருண்குமார் ஆகியோர் முன்னிலையில் ஈஸ்வரன் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவர் வி‌ஷம் வைத்து கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

 

இதனையடுத்து கலைமணியிடம் நடத்திய விசாரணையில் தனக்கும், அழகர்சாமி (வயது 26) என்ற வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தை அறிந்த கணவர் ஈஸ்வரன் தன்னை கண்டித்ததாகவும், இதனால் அழகர்சாமியை சந்திக்க முடியாமல் தவித்ததாகவும் கூறியுள்ளார்.


அழகர்சாமியுடனான காதலுக்கு இடையூறாக ஈஸ்வரன் இருந்ததால் அவர் சாப்பிட்ட உணவில் வி‌ஷம் கலந்து வைத்ததாகவும் கூறினார். இதனையடுத்து போலீசார் கலைமணி, அவரது கள்ளக்காதலன் அழகர்சாமியை கைது செய்தனர். 

 

அவளுக்கு அவன்தான் முக்கியமுன்னா ஓடிப்போயிருக்க வேண்டியதுதானே, என் மகனை கொன்னுட்டு, என் பேரப்பிள்ளையை தவிக்கவிட்டாளே என்று தர்மர் அந்த இடத்தில் கதறி அழுதார். 
 

சார்ந்த செய்திகள்