Skip to main content

ஹெச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட்...

Published on 07/10/2021 | Edited on 07/10/2021

 

warrant for H. Raja ...


பாஜக முக்கிய பிரமுகரான ஹெச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

பாஜகவை சேர்ந்த ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு வேடசந்தூரில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் ஹெச்.ராஜா ஆஜராக அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில்,  விசாரணைக்கு ஆஜராகாததால் அவரை பிடிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 

ஏற்கனவே புதுக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நீதிமன்றத்தை விமர்சித்துப் பேசியது, அண்மையில் பத்திரிகையாளர்களை விமர்சித்திருந்தது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைப் பேச்சுகளுக்கு உரியவர் பாஜகவின் ஹெச்.ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்