Skip to main content

துணை அதிபர் கமலா ஹாரிஸ்! சொந்த ஊரில் உற்சாகம் !

Published on 21/01/2021 | Edited on 21/01/2021

 

Vice President Kamala Harris! Excitement in hometown!

 

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் கடந்த மாதம் நடந்தது. இதில் டொனால்ட் ட்ரம்பை வீழ்த்தி அதிபராக ஜனநாயக கட்சியின் ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் வெற்றி பெற்றனர். இருவரும் நேற்று (20.01.2021) முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டனர். 

 

புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதை அவரது ஆதரவாளர்கள் அமெரிக்கா முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இதனால் அமெரிக்காவே விழா கோலம் பூண்டிருந்தது. ஜோபைடனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “இந்தியா - அமெரிக்காவுக்கு இடையேயான நட்பையும் கூட்டாட்சியையும் வலுப்படுத்த இணைந்து பணியாற்ற எதிர் நோக்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

அதேபோல, ஜோ பைடனுக்கும், கமலா ஹாரிஸுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார் ராகுல் காந்தி. துணை அதிபராக வெற்றிபெற்று பதவியேற்றுக்கொண்ட கமலா ஹாரிஸின் பூர்வீகம் தமிழகத்தில் உள்ள துளசேந்திரபுரம். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே இருக்கிறது இந்த கிராமம். அமெரிக்க தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டியிட்ட நாளிலிருந்தே இந்தக் கிராமத்து மக்கள் உற்சாகமாகவே இருந்தனர். போட்டியில் வெற்றிபெற்றதும் அவர்களின் உற்சாகம் பன்மடங்கானது. இந்நிலையில், துணை அதிபராக கமலா ஹாரிஸ் பொறுப்பேற்றுக் கொண்டதை துளசேந்திரபுரம் மக்கள் கொண்டாடி வருகிறார்கள். 

 

அந்தக் கிராமத்தில் உள்ள தர்ம சாஸ்தா கோவிலில் கமலா ஹாரிஸ் பெயரில் சிறப்பு வழிபாடு நடத்தினர் கிராம மக்கள். கமலா ஹாரிஸ் பெயரில் அர்ச்சனையும் செய்யப்பட்டது. அவரது பெயரை கோலமிட்டு அதில் அகல்விளக்கு ஏற்றி மகிழ்ந்தனர். கமலா ஹாரிஸ் என்கிற பெயர் அகல் விளக்கின் ஒளியில் பிரகாசமாக இருந்தது. சிறப்பு வழிபாடு முடிந்ததும் கிராம மக்கள் இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் உற்சாகமாக கொண்டாடினர். கொண்டாட்டத்தின் இடையே பேசிய கிராம மக்கள், “அமெரிக்காவின் துணை அதிபரான கமலா ஹாரிஸின் பூர்வீகம் தமிழகம் என்பது நமக்கெல்லாம் பெருமை. அவரது பூர்வீகத்தைப் பார்க்க ஒருமுறை அவர் தமிழகம் வர வேண்டும்” என்றனர்.

 

ஜோ பைடன், புதிய அதிபராக பதவியேற்றதைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டொனால்டு டிரம்ப் அதிபராவது பற்றி நினைத்தாலே பயமாக இருக்கிறது” - கமலா ஹாரிஸ்

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
 Kamala Harris says Just thinking about Donald Trump as president is scary

அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் கொண்ட அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது 

இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவார் எனக் கடந்த சில தினங்களுக்கு முன் கூறப்பட்டு வந்தது. இதற்கான ஆதரவுகளையும் டிரம்ப் தீவிரமாகத் திரட்டி வருகிறார்.

இதற்கிடையில், இந்த அதிபர் தேர்தலில் அதே குடியரசுக் கட்சியில் உள்ள அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இளம் தொழிலதிபரான விவேக் ராமசாமி என்பவர் போட்டியிடுவதாக அறிவித்தார். அமெரிக்கா அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஒருவர் போட்டியிட இருப்பது நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. மேலும், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கும் விவேக் ராமசாமிக்கும் கடும் போட்டி நிலவி வந்தது. 

இதனைத் தொடர்ந்து அமெரிக்கா அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று விவேக் ராமசாமி அறிவித்தார். இது குறித்து பேசிய அவர், “ நான் எனது பிரச்சாரத்தை இடை நிறுத்துகிறேன். டொனால்ட் ஜே. டிரம்ப்பை ஆமோதிக்கிறேன், மேலும் அவர் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி என்பதை உறுதிப்படுத்த, என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என்று கூறியிருந்தார். 

இந்த நிலையில், அமெரிக்க துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், “டொனால்டு டிரம்ப் அதிபராக வெற்றி பெற்று வெள்ளை மாளிகைக்கு மீண்டும் திரும்புவார் என்று நினைத்தாலே எனக்கு பயமாக இருக்கிறது. அதனால் தான், நான் நாடு முழுவதும் பயணம் செய்து பிரச்சாரம் செய்கிறேன். டொனால்டு டிரம்ப் அதிபராவது பற்றி நாம் அனைவரும் பயப்பட வேண்டும். நாம் பயப்படும் போது அதற்கு எதிராக நாம் போராட வேண்டும்” என்று கூறினார். 

Next Story

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு கரோனா உறுதி! 

Published on 27/04/2022 | Edited on 27/04/2022

 

Corona confirms US Vice President Kamala Harris!

 

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

 

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவுக்கு சென்ற நேற்று (26/04/2022) வெள்ளை மாளிகைக்கு திரும்பிய போது கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில், அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனது வீட்டிற்கு சென்று தனிமைப்படுத்திக் கொண்டார். கரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், தொற்று நீங்கிய பிறகு அவர் அலுவலகம் திரும்புவார் என வெள்ளை மாளிகைத் தெரிவித்துள்ளது. 

 

ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் கரோனா பரவல் குறைந்து வந்தாலும், சில இடங்களில் ஒமிக்ரான் பிஏ2 வகை பரவல் சற்றே அதிகரித்துள்ளது.