Skip to main content

வேலூர் மக்களவை தேர்தல்: காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 29/07/2019 | Edited on 29/07/2019

வேலூர் மக்களவை தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மையம் வேலூர் நேதாஜி ஸ்டேடியம் காவலர் பயிற்சி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

 

vellore lok sabha election postal poll state now 1118 polices poll

 

 

இன்று காலை 10.00 மணிக்கு தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. தேர்தல் பணியில் ஈடுபடும் 1,118 காவல்துறையினர் தங்களது தபால் வாக்குகளை மாலை 05.00 மணி வரை செலுத்தலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பதிவான வாக்குகள் ஆகஸ்ட் மாதம் 09- ஆம் தேதி எண்ணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்