Skip to main content

சமூக பரவலைத் தடுக்க ரூ 150-க்கு காய்கறி தொகுப்பு

Published on 01/04/2020 | Edited on 01/04/2020

கரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதில் அத்தியாவாசிய பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் வாங்க கடலூர் மாவட்டத்தில் மதியம் 2 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் சிதம்பரம் நகராட்சி சார்பில் 20 பொருட்கள் அடங்கிய காய்கறி தொகுப்பு தயார் செய்யும் பணி சிதம்பரம் எஸ்கே காய்கறிக் கடையில் நகராட்சி ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

 

 Vegetable package for Rs. 150 to prevent social spread


இந்தப் பணிகளை சிதம்பரம் நகராட்சி ஆணையர் சுரேந்தரஷா மற்றும் நகராட்சி பணியாளர்கள் சரவணகுமார் மற்றும் தமிழ்நாடு மருந்தாளுநர்கள் சங்க மாநில செயலாளர் வெங்கடசுந்தரம் ஆகியோர் காய்கறி தொகுப்பு தயாரிப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

 

 

சார்ந்த செய்திகள்