Skip to main content

உச்சத்தை நோக்கி மஞ்சள் விலை; விவசாயிகள் மகிழ்ச்சி...!

Published on 22/07/2023 | Edited on 22/07/2023

 

nn

 

ஈரோட்டில் அதிகப்படியான மஞ்சள் விளைவிக்கப்படும் நிலையில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய விடுமுறை நாட்களைத் தவிர மற்ற நாட்களில் மாவட்டத்தில் 4 இடங்களில் உள்ள ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைக் கூடம், பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைக் கூடம்,  என மஞ்சள் ஏலம் நடக்கும்.

 

இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி மஞ்சள் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ. 10 ஆயிரத்து 500க்கு விற்பனையாகி 12 ஆண்டுகளுக்குப் பிறகு மஞ்சள் குவிண்டால் புதிய உச்சத்தைத் தொட்டது. ஈரோடு மஞ்சளுக்கு மவுசு அதிகரித்துள்ளதே இதற்கு முக்கியக் காரணம். இதனால் ஈரோடு மஞ்சளை வெளிமாநில வியாபாரிகள் போட்டிப் போட்டு வாங்கிச் செல்கின்றனர்.

 

நேற்று ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைக் கூடத்தில் நடந்த மஞ்சள் ஏலத்தில் 2,049 மஞ்சள் மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தனர். இதில் விராலி மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.14,569க்கு விற்றது. ஒரு வாரத்தில் மட்டும் மஞ்சள் குவிண்டால் ரூ.4,399 வரை உயர்ந்துள்ளது. மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ. 15 ஆயிரத்தை நெருங்கியது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்