Skip to main content

கணவனை துண்டு துண்டாக வெட்டி கோவளம் கடற்கரையில் புதைத்த மனைவி; போலீஸ் விசாரணையில் திடுக்

Published on 05/04/2023 | Edited on 05/04/2023

 

 Wife who cut her husband to pieces and buried her on Kovalam beach; Surprised by the police investigation

 

விமான நிலைய ஊழியரைக் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி கடற்கரையில் புதைக்கப்பட்ட சம்பவத்தில் மனைவியும் கோவில் பூசாரி ஒருவரும் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயந்தன். நங்கநல்லூரில் தனது சகோதரி வீட்டில் வசித்து வந்த ஜெயந்தன், சென்னை விமான நிலையத்தில் இயங்கும் வெளிநாட்டு நிறுவனத்தின் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 18 ஆம் தேதி சொந்த ஊருக்குச் செல்வதாக சொல்லிவிட்டுச் சென்ற ஜெயந்தன் திரும்பி வராததால் அவரது சகோதரி சென்னை பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

இது தொடர்பாக போலீசார் அவரது செல்போன் சிக்னலை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் பயன்படுத்திய செல்போன் சிக்னல் புதுக்கோட்டை மாவட்டம் செம்மாலம்பட்டி என்ற பகுதியைக் காட்டியது. உடனடியாக அங்கு விரைந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் பாக்கியலட்சுமி என்ற பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், தாம்பரத்தில் பாலியல் தொழில் செய்து வந்த பாக்கியலட்சுமிக்கு ஜெயந்தனோடு பழக்கம் ஏற்பட்டு இருவரும் 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில், அடுத்த ஆண்டே பிரிந்து விட்டனர்.

 

அதன் பிறகு புதுக்கோட்டைக்கு வந்த பாக்கியலட்சுமி அங்கும் பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். மார்ச் 18 ஆம் தேதி செம்மாலம்பட்டிக்கு சென்ற ஜெயந்தன், தன்னுடன் வாழ வேண்டும் என்று பாக்கியலட்சுமியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாக்கியலட்சுமி அவரைக் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸ் மற்றும் கட்டைப் பையில் வைத்து காரில் கோவளத்திற்கு கொண்டு வந்து பக்கிங்காம் கால்வாய் அருகே குழி தோண்டி புதைத்தது தெரிய வந்தது. பாக்கியலட்சுமிக்கு சங்கர் என்ற நபரும் அதே பகுதியைச் சேர்ந்த கோயில் பூசாரி வேல்முருகனும் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக கோயில் பூசாரி வேல்முருகன் மற்றும் பாக்கியலட்சுமி ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

திக் திக் நொடிகள்... சென்னையை கலங்கடித்த சம்பவம்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Tick-tick seconds... a child saved by tact

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன்-ரம்யா தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இன்று காலை குழந்தையின் தாய் ரம்யா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது கை தவறி குழந்தை நான்காவது மாடியில் இருந்து இரண்டாவது தளத்தில் உள்ள வெளிப்புற கூரை மீது விழுந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டனர். கீழே பெட்ஷீட் போன்றவை விரிக்கப்பட்டு குழந்தை விழுந்தால் பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திக் திக் நொடிகளை கடந்து அந்த பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். காப்பாற்றப்பட்ட குழந்தையானது உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.