Skip to main content

மைனர் பெண்ணுக்கு சீண்டல்... தொல்லை கொடுத்தவனுக்கு சகோதரர்கள் கொடுத்த கொடூர தண்டனை !

Published on 08/08/2019 | Edited on 08/08/2019

திருச்சி திருவானைக்காவல் திம்மராயசமுத்திரம் பகுதியை சேர்ந்த கிட்டப்பாவின் மகன் மணிகண்டன். கொத்தனாரான இவருக்கு திருமணமாகிவிட்டது. இவரை புல்லட்மணி என்று தான் அழைப்பார்கள். மணிகண்டன் அதே பகுதியில் பள்ளி மாணவி ஒருவரை கொஞ்ச நாளாக பின் தொடர்ந்து காதல் என்கிற பெயரில் டார்ச்சர் பண்ணி கொண்டிருந்திருக்கிறார்.

 

trichy girl thiruvanaikovil

 

 

விவகாரம் அவரது அண்ணனுக்கு தெரியவந்தது. மணிகண்டன் திருவானைக்காவல் பாரதிநகரில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழி மறித்து தாக்க தொடங்கினர். இதனால் அவர் அலறி அடித்துக்கொண்டு அருகில் இருந்த அடகுக்கடைக்குள் புகுந்தார். இருப்பினும் விடாமல் அந்த கும்பல் அவரை அடகுக்கடையில் இருந்து பிடித்து வெளியே இழுத்து வந்து ரோட்டில் வைத்து இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர்.

மேலும் அதில் ஒருவர் மாறி ஒருவர் அரிவாளை திருப்பி மறுபக்கத்தால் மணிகண்டனை தாக்கினர். அவரை தொடர்ந்து தாக்கிய பின் அங்கிருந்து அந்த கும்பல் தப்பியோடியது. இந்த தாக்குதலில் மணிகண்டன் படுகாயமடைந்து கிடந்தார். இந்த சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீரங்கம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மணிகண்டனை 5 பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோவை பார்த்தவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியினர். மணிகண்டனை தாக்கிய நபர்கள், அவர் காதல் பெயரில் டார்ச்சர் பண்ணின பெண்ணின் சகோதரர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் என அடையாளம் தெரிந்தது.  

மேலகொண்டயம் பேட்டையம் பகுதியை சேர்ந்த சிவா, சுரேஷ், சந்தோஷ் இவர் நண்பர் சோடா உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்த எஸ்.ஐ. கோபி மற்றும் எஸ்.ஐ. பாத்திமா ஆகியோர் இரவோடு இரவாக அவர்களை தேடி கைது செய்துள்ளனர். 

காஞ்சிபுரம் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிப்பதால் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதுகாப்பு பணிக்கு போலீஸ் அதிகாரிகள் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த பாதுகாப்பு பணிக்கு ஸ்ரீரங்கம் ஏசி இராமசந்திரன் தலைமையில் காவலர்கள் அங்கு சென்றிருந்த நேரத்தில் இப்படி ஒரு சம்பவம் ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்