Skip to main content

துக்க நிகழ்ச்சிக்குச் சென்றபோது சோகம்..! தந்தையும் குழந்தையும் பலி..! 

Published on 17/08/2021 | Edited on 17/08/2021

 

Tragedy when we go to a mourning   Father and child  passes away

 

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே கிளியநல்லூர் பகுதியில் உள்ள திருச்சி - சேலம் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் கணவன், மனைவி, இரு குழந்தைகள் என 4 பேர் சென்றுள்ளனர். அப்பொழுது எதிரே வந்த அரசுப் பேருந்தும் இந்த இருசக்கர வாகனமும் எதிரெதிரே மோதி விபத்துக்குள்ளானது. இதில், தந்தை மற்றும் மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

 

திருச்சி் கீழ சிந்தாமணி, வென்னீஸ் தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் மணிகண்டன் (30). இவரது மனைவி மலர் (28). இவர்களின் மகன் தர்ஷன்(8), மகள் தர்ஷினி(3) ஆகிய நான்கு பேரும் கீழ சிந்தாமணியிலிருந்து இருசக்கர வாகனத்தில் மண்ணச்சநல்லூர் அருகே கரியமாணிக்கத்தில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்விற்காகச் சென்று கொண்டிருந்தனர். 

 

அப்போது திருச்சி - சேலம் சாலை, கிளியநல்லூர் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசுப் பேருந்து எதிர்பாராத விதமாக இவர்களது இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மணிகண்டனுக்கு கால் முறிந்தது. தாய் மற்றும் 8 வயது சிறுவன் படுகாயமடைந்தனர். 3 வயதான அவரது பெண் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தது. 

 

விபத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்டு சிகிச்சைககாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்த தாய் மற்றும் மகன் ஆகியோர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தந்தையையும் 3 வயது குழந்தையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், 3 வயது குழந்தை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தது. கால் முறிந்த மணிகண்டன், திருச்சி அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அரசுப் பேருந்து ஓட்டுநர் சேலம் மாவட்டம், ஓமலூர், பெரிய ஏரி பகுதியைச் சேர்ந்த சங்கரை (38) போலீசார் கைது செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.