Skip to main content

சொந்த ஊருக்கு வந்த மகன் மாயம்... சடலமாக கண்டெடுக்கப்பட்டதால் கதறிய பெற்றோர்...

Published on 17/06/2019 | Edited on 17/06/2019

 

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் மதுரா நத்தம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் ஐய்யனார். வயது 25. டிப்ளமோ படித்துவிட்டு சென்னையில் தனியார் கம்பெனியில் ஓட்டுநராக பணிசெய்து வரும் அவர் நேற்று காலை தான் சென்னையில் இருந்து வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் சென்னையில் இருந்து வந்த ஐய்யனார் வீட்டில் இருந்து அருகே கூவாகம் ஏரியிலுள்ள காளி கோவிலுக்கு சென்றதாக தெரிகின்றது. அப்போது   அதை ஊரைச் சேர்ந்த வாலிபர்களுடன் இருந்துள்ளதாக தெரிகின்றது.  ஆனால் சென்ற வாலிபர் இரவு வீட்டிற்கு  சாப்பிட வரவில்லை, இரவு வெகு நேரம் ஆகியும் வராததால் அவரது தாய் ,தந்தை மற்றும் உறவினர்கள் ஐய்யனாரை தேடியுள்ளார்கள். 


  iyanar


இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த கோவிந்தன் மகன் பழனி என்ற விவசாயி இன்று காலை வழக்கம்போல் வயலுக்கு சென்றுள்ளனர். அப்போது பழனிக்கு சொந்தமான விவசாய கிணற்றில் சுமார் 75 அடி ஆழத்தில் கிணற்றில் இறங்குவதற்கும், ஏறுவதற்கும் கட்டப்பட்ட நைய்லான் கயிற்றில் தூக்கு மாட்டி தொங்கியுள்ளார். 


 

கிணற்றின் உரிமையாளர் பழனி என்பவர் இறந்துபோன தூக்கில் தொங்கும் ஐய்யனாரின் தந்தை கோவிந்தனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே கோவிந்தன் மற்றும் உறவினர்கள், கிராம  மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கோவிந்தன் தனது மகனின் பிரேதத்தை பார்த்து கண்ணீர் விட்டு கதறினார். பிறகு தனது மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளது என்றும், தனது மகனை அடித்து கொலைசெய்து கிணற்றில் உள்ள நைலான் கயிற்றில் தூக்கில் மாட்டி தொங்கவிட்டு விட்டு சென்றுள்ளதாக சந்தேகம் உள்ளது என்றனர். 
 

இந்த சம்பவம் அறிந்த  திருநாவலூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக விழுப்புரம்  முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரிக்கு எடுத்து சென்றனர்.  இது திட்டமிட்டு கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டதா அல்லது வாலிபர் தானே தற்கொலை செய்து கொண்டாரா என திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

மண்ணுக்குள் போதைப் பொருள்; தோண்டி அழிக்கும் காவல்துறை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
police discovered and destroyed the wine cellars hidden in the liquor

வேலூர் மாவட்டத்தில்  கள்ளச்சாராயம்  காய்ச்சுபவர்களைத் தடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதன் அடிப்படையில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி வனப்பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக பெரிய வகை பேரல்களில் ஊரல்கள் பதுக்கிவைக்கப்பட்டு சட்டத்துக்கு விரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட காவல்துறை, கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் தனிப்படை அமைத்து வனப்பகுதிக்குள் பத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது,  கள்ளச்சாராயம் காய்ச்சி  லாரி டியூப்கள் மூலமாக நிரப்பி பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக முள் புதர்களில்  மறைத்து வைத்துள்ளனர். இதனைக் கண்டுபிடித்த போலீசார் சாராய டியூப்புகளை தோண்டி எடுத்து, அதைக் கீழே கொட்டி அழித்தனர்.

அதேபோல் பேரணாம்பட்டு அருகே சாக்கர் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 2900 லிட்டர் சாராய ஊரல்களைக் கண்டுபிடித்து கொட்டி அழித்தனர் . இதனால் நடுக்காட்டில் சாராயம் ஆறாக ஓடியது. வழக்கமாக சாராய ஊரல்கள்தான் ட்ரம்களின் ஊரல் போட்டு அதனை மண்ணுக்கு கீழே புதைத்து வைப்பார்கள். போலீஸில் மாட்டக்கூடாது என்பதற்காக இதுபோன்று செய்வார்கள். ஆனால் இப்பொழுது காய்ச்சப்பட்ட சாராயத்தை அதேபோல் செய்கிறார்கள். அதனையும் போலீசார் கண்டறிந்து மண்ணுக்குள் இருந்ததை தோண்டி எடுத்து கீழே போட்டு அழித்தனர்.

காவல் துறையினர் நடத்திய இந்த அதிரடி ரெய்டில், வனப்பகுதிகளில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 120 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 2900 லிட்டர் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஊரல்களைக் கண்டுபிடித்து நடுக்காட்டில் கீழே கொட்டி அழித்தனர் காவல்துறையினர்.