Skip to main content

கடற்கரையில் குவிந்த மக்கள்-தமிழகத்தின் இன்றைய கரோனா நிலவரம்!

Published on 29/08/2021 | Edited on 29/08/2021

 

Today's corona situation in Tamil Nadu!

 

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழகத்தில் கடற்கரையில் பல இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஊரடங்கு தளர்வில் கடற்கரைக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை மெரினா கடற்கரைக்கு வழக்கத்தைவிட பொதுமக்கள் வருகை அதிகமாக இருந்தது. அண்ணா நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை மக்கள் அதிகளவில் குவிந்திருந்தனர். பலர் கடலில் உற்சாகமாக குளித்துக் கொண்டிருந்தனர். பலர் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் சுற்றித் திரிந்தனர். அதேபோல் கடலூர் மாவட்டம் வெள்ளி கடற்கரையிலும் சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

 

தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 1,551லிருந்து குறைந்து  1,538 ஆக பதிவாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விட சற்று குறைவாகும். இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,61,974 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று  189 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 182 என்று இருந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.

 

Today's corona situation in Tamil Nadu!

 

இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரேநாளில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 34,878 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 18 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 17,322 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 1,753 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25,59,637 பேர் மொத்தமாகக் குணமடைந்துள்ளனர். இணை நோய்கள் ஏதும் இல்லாத 3 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். கோவை-209, ஈரோடு-132, திருவள்ளூர்-67, தஞ்சை-76, நாமக்கல்-51, சேலம்-56, திருச்சி-57, திருப்பூர்-75பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்