Skip to main content

இன்று தமிழ்நாட்டில்.. பனைவிதை திருவிழா.. உற்சாகமாக பங்கேற்ற இளைஞர்கள்!

Published on 22/09/2019 | Edited on 22/09/2019

மண்ணையும், நீரையும் காக்க பனை விதை.. என்று நம்மாழ்வார் கிராமம் கிராமாக சென்று சொன்னார். ஒரு பனை படுகிறது என்றால் அங்கே நிலத்தடி நீர் கீழே போகிறது. பெரிய ஆபத்து உள்ளது என்பதை உணர வேண்டும் என்று தொடர்ந்து வழியுறுத்தி வந்தார். அதே நேரத்தில் தான் செங்கல் சூளைகளுக்காக பனை மரங்களை வெட்டி அழித்துக் கொண்டிருநதார்கள். எஞ்சிய பனையும் சூளையில் எரிந்து சாம்பல் ஆனது.

 

palm


அவர் மறைந்தாலும் அவர் சொன்னதை சில ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி நடைமுறைப்படுத்தி வந்தது. சில ஆண்டுகளாகவே பனை விதைகளை சேகரித்து பொது இடங்களில் நட்டு வந்தனர். நம்மாழ்வார் மறைவுக்கு பிறகு அவர் சொன்ன இயற்கை விவசாயம், மரம் வளர்ப்பு போன்ற விழிப்பணர்வுகள் இளைஞர்கள் மத்தியிலும் வேகமாக பரவியது. அதன் தாக்கம் தான் நீர்நிலைகளை சீரமைக்கவும் சீரமைத்த நீர்நிலைகளில் மரக்கன்றுகளை நட்டு, பராமரிப்பதும் குறுவனம் அமைப்பது என்று இளைஞர்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை வருங்கால சந்ததிக்காக செலவிட்டு தங்கள் உழைப்பையும் கொடுத்து வருகிறார்கள். அதில் ஒரு பகுதிதான் பனை விதைப்பு.

 

pp


இளைஞர்கள் விடுமுறை நாட்களில் கேளிக்கைகளுக்கு செல்லாமல் சொந்த ஊர்களுக்கு வந்துவிடுகிறார்கள். வரும் இளைஞர்கள் நீர்நிலை சீரமைப்பு, மரக்கன்று நடுதல், பனை விதை சேகரிப்பு என்று விடுமுறையை பயனுள்ளதாக கழித்துவிட்டு செல்கிறார்கள். உள்ளூரில் இருக்கும் மாணவர்கள், இளைஞர்களும் தொடர்ந்து அந்தப் பணிகளை செய்து வருகின்றனர். அதில் ஒரு நாள்தான் செப்டம்பர் 22 ஞாயிற்றுக் கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் இளைஞர்களால் சீரமைக்கப்பட்ட நீர்நிலைகளில் பனைமரக்காதலர்கள் என்ற அமைப்பின் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வெளியூர்களில் வேலையும் இளைஞர்கள் இணைந்து பெரிய குளம் ஏரியின் கரைகளிலும், காட்டாற்றில் இருந்து ஏரிக்கு தண்ணீர் வரும் கால்வாய் கரைகளிலும் 4 அடிக்கு ஒரு பனை வீதம் சுமார் 7 ஆயிரம் பனை விதைகளை விதைத்தனர்.

 

pp

 

அதே ஊரில் இளைஞர் மன்றத்தினரால் சீரமைக்கப்பட்ட கோடி குளத்தில் அப்பகுதி இளைஞர்கள் சுமார் 5 ஆயிரம் பனை விதைகளை விதைத்தனர். மறமடக்கி கிராமத்தில் நீர்நிலை பாதுகாப்பறிக்காக உருவாக்கப்பட்ட இளைஞர் குழுவினர் வழக்கம்போல குழந்தைகளை வைத்தே பனை விதை திருவிழாவை தொடங்கி சுமார் 5 ஆயிரம் விதைகளை விதைத்துள்ளனர். ஆலங்குடி கோயிலூர் பகுதியில் பனை விதைகளை இளைஞர்கள் விதைதுள்ளனர். 

 

pp

 

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள கானூர் கிராமத்தில் கிரீன் நீடா ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு தலைமையில் தொடங்கிய பனை விதை திருவிழாவில் மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா கலந்து கொண்டு பனை விதைப்பை தொடங்கி வைத்து பேசினார். நல்லதொரு முன்னெடுப்பாக உள்ளது. இதேபோல எங்கே பனை விதைப்பு திருவிழா நடந்தாலும் என் பங்கும் இருக்கும் என்றார்.

இப்படி இன்று ஒரு நாளில் மட்டும் கணக்கிலடங்கா பனை விதைகளை இளைஞர்கள் விதைத்து சாதனை படைத்துள்ளனர். மேலும் வாரம் முழுவதும் விதை சேகரிப்போம் ஒவ்வொரு விடுமுறை நாளிலும் பனை விதைப்போம் என்கிறார்கள் இளைஞர்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோன்கள் கண்காணிப்பில் வெள்ளியங்கிரி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Drones are the key to surveillance

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் காட்டுத்தீ ஏற்படும் சூழ்நிலைகளும் உருவாகியுள்ளது. பக்தர்கள் மலையேறுவதற்கான பாதையைத் தவிர்த்து வேறு பாதையைப் பயன்படுத்திவிடாமல் இருக்க கண்காணிக்கப்படுவதாற்காக ட்ரோன்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாரை சாரையாக மலையேற தொடங்கி வரும் நிலையில் சுழற்சி முறையில் தற்போது ட்ரோன்கள் மூலம் பக்தர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.