Skip to main content

விஷவாயு தாக்கி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் மூவர் உயிரிழப்பு!

Published on 21/04/2022 | Edited on 21/04/2022

 

Three contract employees in poison gas attack madurai

                                                                            கோப்புப்படம் 

மதுரையில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மதுரை மாவட்டம் நேதாஜி நகரில் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 3 பேரும் மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கடந்த வாரம் சென்னையை அடுத்த  ஆவடியில் இதேபோல் குடிநீர் தொட்டியைச் சுத்தம் செய்த வீட்டின் உரிமையாளர் உட்பட 3 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மதுரை மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்களே விஷவாயு தாக்கி உயிரிழந்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்