Skip to main content

வாக்காளர் அட்டையை சாலையில் வீசி 'கேங்மேன்' தேர்வில் வெற்றிபெற்றவர்கள் போராட்டம்! (படங்கள்)

Published on 09/03/2021 | Edited on 09/03/2021

 

 

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் அருகே கேங்மேன் தேர்வில் வெற்றிபெற்றவர்கள், பணி நியமன ஆணை வழங்க வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி நியமன ஆணையை வழங்காவிட்டால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை சாலையில் போட்டு போராட்டம் நடத்தினர். 

 

 

 

சார்ந்த செய்திகள்