Skip to main content

தீபத்திருவிழாவுக்காக சென்னை, கடலூரில் இருந்து சிறப்பு ரயில்!

Published on 10/12/2019 | Edited on 10/12/2019

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு தென்னிந்தியாவின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவர். அப்படி வரும் பக்தர்களுக்கு பேருந்து போக்குவரத்து போதவில்லை. இதனால் ரயில் சேவையை அதிகப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ரயில்வே வாரியத்துக்கு வைக்கப்பட்டது. 

THIRUVANNAMALAI ANNAMALAIYAR TEMPLE KARTHIKAI DEEPAM FESTIVAL SPECIAL TRAINS

அதன்படி சில இரயில்களின் சேவையை திருவண்ணாமலை வரை நீட்டித்துள்ளனர். சென்னை கடற்கரையில் இருந்து தினமும் மாலை 06.00 மணிக்கு புறப்படும் (66017) ரயில் வேலூர் கண்டோன்மெண்ட் வரை செல்லும். அந்த ரயிலை டிசம்பர் 9 முதல் 11ம் தேதி வரை திருவண்ணாமலை ரயில் நிலையம் வரை இயக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

THIRUVANNAMALAI ANNAMALAIYAR TEMPLE KARTHIKAI DEEPAM FESTIVAL SPECIAL TRAINS

அதேபோல், விழுப்புரம் டூ வேலூர் வரையிலான பயணிகள் 06842 என்கிற ரயில் கடலூர் (திருப்பாதிரிபுலியூர்) வரை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருப்பாதிரிபுலியூரில் இருந்து டிசம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் இரவு 8:50க்கு புறப்பட்டு நள்ளிரவில் 01.00 மணிக்கு வேலூர் சென்றடையும்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.