Skip to main content

வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுத் தரக்கோரி மனைவி கண்ணீருடன் மனு...

Published on 07/08/2020 | Edited on 07/08/2020
Kammapuram

 

 

கடலூர் மாவட்டம் கம்மாபுரம் அருகே உள்ளது பெரியக்கோட்டிமுளை கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் 40 வயது பெரியசாமி. இவருக்கும் அம்சவல்லி என்பவருக்கும் கடந்த 15 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 15 வயதில் பிரேம்குமார், 13 வயதில் பிரதாப், 10 வயதில் அனுஷ்யா ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

 

குடும்ப வறுமையின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு துபாய்க்கு கட்டிட வேலை செய்வதற்காக பெரியசாமி சென்றுள்ளார். அங்கு சென்ற பிறகு தினமும் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் செல்போனில் தொடர்பு கொண்டு அவ்வப்போது பேசி வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அவரது செல்போன் நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் பெரியசாமியுடன் தொடர்பு கொள்ள முடியாமல் தவிப்பில் இருந்துள்ளனர்.

 

இந்த நிலையில் அவருடன் வேலை செய்து வந்த பக்கத்து ஊரைச் சேர்ந்த நண்பர் ஒருவர், பெரியசாமி மனைவி அம்சவல்லிக்கு போன் செய்து உங்கள் கணவர் தங்கியிருந்த அறையில் இறந்து போய் கிடந்துள்ளார். அவருடன் வேலை செய்த சக நண்பர்கள் அவரை வேலைக்கு அழைத்துச் செல்வதற்காக அவர் அறைக்கு சென்று எழுப்பியபோது அவர் உயிரிழந்த நிலையில், பிணமாக கிடந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது என்ற தகவலை கூறியுள்ளார்.

 

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அம்சவல்லி, அவரது குடும்பத்தினர் செய்வதறியாமல் நேற்று கம்மாபுரம் காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டுள்ளனர். அங்குள்ள போலீசார் அவர்களை தாசில்தார் அல்லது விருத்தாசலம் சார் ஆட்சியர் ஆகியோரிடம் புகார் அளிக்குமாறு ஆலோசனை கூறியுள்ளனர். இதையடுத்து அம்சவல்லி தனது மூன்று பிள்ளைகளுடன் விருத்தாசலம் தாசில்தார் பொறுப்பு செல்வமணியை சந்தித்து தனது கணவரை மீட்டு தருமாறும் தனது கணவர் இறப்பின் மர்மத்தை உரிய விசாரணை செய்து வெளிக்கொண்டுவர வேண்டும், அவரின் உடலை ஊருக்கு  கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளார்.

 

மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் செல்வமணி, மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை அனுப்பி வைத்துள்ளார். கணவர் இறந்த சூழ்நிலையில் தனது பிள்ளைகளோடு தனது கணவரின் மரணம் எப்படி ஏற்பட்டது, அவர் உடலை ஊருக்கு கொண்டுவர முடியுமா, இப்படி பல்வேறு குழப்பமான நிலையில் உள்ளனர் அம்சவல்லி அவரது பிள்ளைகளும். அந்தக் குடும்பம் பரிதவிப்பில் உள்ளது கண்டு கிராமத்து மக்களும் சோகத்தில் உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.