Skip to main content

 கொள்ளையன் நாதுராம் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Published on 27/03/2018 | Edited on 27/03/2018
nathuram

 

கொள்ளையன் நாதுராம் மற்றும் அவனது கூட்டாளிகள் பக்தாராம், தினேஷ் சவுத்ரி ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

 

 சென்னை கொளத்தூரில் உள்ள  நகை கடையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3.5 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி ஆகியவற்றை கொள்ளையடித்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நாதுராம் (28), தினேஷ் சவுத்ரி (20) மற்றும் பக்தாராம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதான மூன்று கொள்ளையர்களும் ராஜஸ்தானில் இருந்து கடந்த 26ம் தேதி சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் 3 பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

 

 இந்நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவின்பேரில், கொள்ளையர்கள் நாதுராம் மற்றும் பத்தாராம் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்