Skip to main content

பள்ளிக்கு அருகே டாஸ்மாக் கடையா...? பொதுமக்கள் எதிர்ப்பு!

Published on 01/05/2022 | Edited on 01/05/2022

 

 Is there a Tasmac store near the school ...? Public struggle

 

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது பரணம். இந்த கிராமத்தில் முந்திரிக்காட்டில் ஏற்கனவே ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதில் அப்பகுதி சுற்றுப்பட்டு கிராமங்களைச் சேர்ந்த மது குடிப்போர் தேடிவந்து மது வாங்கி குடித்துவிட்டு முந்திரி மரங்களின் நிழல்களில் படுத்து ஓய்வு எடுக்கிறார்கள். இந்நிலையில் அந்தக் கடை முந்திரிக்காட்டுப் பகுதியில் உள்ளதால் மதுகுடிப்போருக்கு பாதுகாப்பு இல்லையாம் அதனால் அந்த மதுக்கடையை பரணம் - பெலாக்குறிச்சி சாலை பகுதிக்கு மாற்றுவதற்கு அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

 

இந்த தகவலறிந்து பரணம் பள்ளியில் படித்து வரும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காரணம் இந்த சாலை வழியாகத்தான் பரணத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கு மாணவ மாணவிகள் சென்று வரவேண்டும். அதிலும் குறிப்பாக பெலாக்குறிச்சி, வீராரக்கன், நாகல்குழி ஆகிய கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் நடந்தும், சைக்கிள் மூலமும் காலை மாலை சென்று வருகிறார்கள். அதனால் அப்பகுதியில் டாஸ்மாக் கடை திறந்தால் பள்ளி சென்று படிக்கும் மாணவர்களுக்கு பெரும் இடையூறு ஏற்படும். அதனால் அப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது. ஏற்கனவே முந்திரிக்காட்டு பகுதியில் பொதுமக்களுக்குத் தொந்தரவு இல்லாத நிலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை ஏன் பள்ளி இருக்கும் பகுதிக்கு மாற்ற வேண்டும் என கேள்வி எழுப்புகின்றனர். மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கையெழுத்திட்டு புகார் மனு தயார் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

 

இதுகுறித்து நாம் விசாரித்த அளவில், டாஸ்மாக் கடை திறப்பு குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி ஆய்வு செய்து பள்ளி செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதை நிறுத்த வேண்டும், மீறி கடை திறக்க முற்பட்டால் பெற்றோர்கள், மாணவ மாணவிகள் இணைந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்ட பாட்டியை கொன்ற பேரன்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Grandson attack grandmother for drunkenness

குடிப்பழக்கத்தை கண்டித்த பாட்டியை பேரனே கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ளது சாரூர். இந்த பகுதியில் வசித்து வந்தவர் தாசம்மாள் (80). இவருடைய மகன் புஷ்பராஜ் என்பவருக்கு அஜித் மகன் இருக்கிறார். அவருக்கு வயது 23.

குடும்ப பிரச்சனை காரணமாக புஷ்பராஜின் மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால் புஷ்பராஜூம் அவருடைய மகன் அஜித்தும் தாசம்மாளுடன் வசித்து வந்தனர். அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் புஷ்பரஜ் இறந்து விட்டார் .

அதன் பிறகு பாட்டியுடன் அஜித் மட்டும் வசித்து வந்தார். அந்த பகுதியில் பெயிண்டிங் வேலைகளுக்கு சென்று வந்த அஜித் குடிப்பழக்கத்திற்கு நாளடைவில் அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாட்டி  தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட் நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்கும்படி அஜித் மது அருந்திவிட்டு ரகளை செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று இரவு 11 மணிக்கு மது குடித்துவிட்டு வந்த அஜித் பாட்டி தாசதாசம்மாளிடம் இது தொடர்பாக சண்டை போட்டுள்ளார். அப்பொழுது பாட்டி தட்டி கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அஜித் தாசம்மாளை கீழே தள்ள, சுவரில் தலை மோதி சம்பவ இடத்திலேயே தாசம்மாள் உயிரிழந்தார். தான் தாக்கியதால் பாட்டி இறந்ததை அறிந்துகொண்ட அஜித் பயத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.