Skip to main content

தொடரும் டாஸ்மாக் கொள்ளை... இருவரைக் கத்தியால் வெட்டிய கொள்ளையர்கள்...

Published on 18/09/2020 | Edited on 18/09/2020

 

Theft at kallakurichi tasmac


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ளது கொரட்டாங்குறிச்சி கிராமம். இந்தக் கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் அரசின் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்தக் கடையில் மது பாட்டில் வாங்குவதற்காக அக்கம்பக்கம் கிராமத்தைச் சேர்ந்த மது பிரியர்கள் நிறையபேர் வந்து செல்வார்கள். இந்தக் கடையில் கிளாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் உதவியாளராகவும், கோலியனூர் பகுதியைச் சேர்ந்த கதிரவன் விற்பனையாளராகவும் பணியில் இருந்தனர். நேற்று இரவு கடையில் விற்பனையான பணத்தைக் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

கணக்கை முடித்து, கடையை மூடும்போது திடீரென பைக்கில் வந்த 4 மர்ம நபர்கள், இருவரையும் கத்தியால் வெட்டி கடையின் சாவியைப் பிடுங்கி, பணத்தைக் கொள்ளையடித்துச் செல்ல முயன்றுள்ளனர். மர்ம நபர்களால் வெட்டுப்பட்ட ஊழியர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்தப் பகுதியில் இருந்தவர்களும், டாஸ்மாக் கடையின் அருகில் பார் நடத்தி வந்த ஊழியர்களும் கொள்ளையர்களை துரத்திப் பிடிக்க முயன்றுள்ளனர். அவர்கள்மீது கொள்ளையர்கள் மிளகாய் பொடியை வீசிவிட்டு நான்கு கொள்ளையர்களும் தப்பிச் சென்றனர்.

 

Theft at kallakurichi tasmac

 

கொள்ளையர்களால் தாக்கப்பட்ட விற்பனையாளர் கதிரவன் மற்றும்  உதவியாளர் வெங்கடேசன் ஆகிய இருவரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தகவல் அறிந்து உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி விஜயகுமார் மற்றும் திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவத்தின்போது டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் வசூலான 3 லட்சத்து 27 ஆயிரத்து 250 ரூபாய் கொள்ளையர்களிடம் இருந்து தப்பியுள்ளது எனத் தெரியவந்துள்ளது. இதே டாஸ்மாக் கடையில் ஏற்கனவே இரண்டு முறை கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Ad

 

இதேபோல, ஆசனூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையின் விற்பனையாளர்களைக் கடந்த மாதம் கத்தியால் வெட்டி விட்டு ரூ.3 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இப்படிக் கடந்த இரு மாதங்களாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு டாஸ்மாக் கடைகளில் தொடர் கொள்ளை சம்பவம் நடந்து வருகிறது. போலீசார், கொள்ளையர்களை விரைந்து பிடிக்க வேண்டுமென்று கூறுகிறார்கள் டாஸ்மாக் அலுவலர்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்ட பாட்டியை கொன்ற பேரன்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Grandson attack grandmother for drunkenness

குடிப்பழக்கத்தை கண்டித்த பாட்டியை பேரனே கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ளது சாரூர். இந்த பகுதியில் வசித்து வந்தவர் தாசம்மாள் (80). இவருடைய மகன் புஷ்பராஜ் என்பவருக்கு அஜித் மகன் இருக்கிறார். அவருக்கு வயது 23.

குடும்ப பிரச்சனை காரணமாக புஷ்பராஜின் மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால் புஷ்பராஜூம் அவருடைய மகன் அஜித்தும் தாசம்மாளுடன் வசித்து வந்தனர். அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் புஷ்பரஜ் இறந்து விட்டார் .

அதன் பிறகு பாட்டியுடன் அஜித் மட்டும் வசித்து வந்தார். அந்த பகுதியில் பெயிண்டிங் வேலைகளுக்கு சென்று வந்த அஜித் குடிப்பழக்கத்திற்கு நாளடைவில் அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாட்டி  தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட் நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்கும்படி அஜித் மது அருந்திவிட்டு ரகளை செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று இரவு 11 மணிக்கு மது குடித்துவிட்டு வந்த அஜித் பாட்டி தாசதாசம்மாளிடம் இது தொடர்பாக சண்டை போட்டுள்ளார். அப்பொழுது பாட்டி தட்டி கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அஜித் தாசம்மாளை கீழே தள்ள, சுவரில் தலை மோதி சம்பவ இடத்திலேயே தாசம்மாள் உயிரிழந்தார். தான் தாக்கியதால் பாட்டி இறந்ததை அறிந்துகொண்ட அஜித் பயத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.