Skip to main content

கரோனா தொற்றால் அமைச்சர் துரைக்கண்ணு உயிரிழப்பு; கலங்கும் தஞ்சை அதிமுக

Published on 01/11/2020 | Edited on 02/11/2020
admk minister duraikannu

 

கரோனா தொற்றால் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு மரணமடைந்தார். இது அதிமுகவினர் மற்றும் அவரது குடும்பத்தை கலங்க வைத்திருக்கிறது.

தஞ்சை மாவட்டம்,  பாபநாசத்தை அடுத்துள்ள  ராஜகிரியை  சேர்ந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் தந்தை பெயர் ராசுபடையாச்சி. இவர் தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரியில் பி.ஏ. வரை படித்தவர். படிப்பை முடித்துவிட்டு கூட்டுறவு சொசைட்டியில் சில ஆண்டுகள் பணி புரிந்து பின்னர் அதிமுகவில் ஐக்கியமானார். வேளாண் விற்பனைக்கு தலைவராக இருந்துவந்தார். பாபநாசம் ஒன்றிய செயலாளராக இருந்தவருக்கு, தஞ்சை வடக்கு மாவட்ட அதிமுகவின் மாவட்ட செயலாளராக இருந்த ரெங்கசாமி அமமுகவிற்கு சென்றதும், மா,செ பொறுப்பும் கிடைத்தது.

பாபநாசம் சட்டன்ற தொகுதியில் அதிமுகவின் சார்பில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றிபெற்றாலும், தஞ்சை தெற்கு மா.செ.வான வைத்திலிங்கத்தை மீறி அமைச்சராகவோ, ஆளுமையோ செலுத்தமுடியாத கையறுநிலையிலேயே இருந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார், அதேவேளையில் தொடர்ந்து அமைச்சராகவும், அதிகாரத்திலும் இருந்த வைத்தியலிங்கம் சொந்த தொகுதியிலேயே தொற்றதால் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் எனும் ஜாக்பாட் அடித்தது.

தஞ்சை வடக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க வின் செயலாளராகவும், அமைச்சராகவும் இருந்துகொண்டு வைத்தியலிங்கத்திற்கு எதிரணியாக தனது சொந்த சமூகத்தவர்களை ஓரணியாக்கி அசைக்கமுடியாத சக்தியாக வளர்ந்து வந்தார்.

 

admk minister duraikannu


அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு பானுமதி என்கிற மனைவியும் இரண்டு மகன்களும், நான்கு மகள்களும் உள்ளனர், மூத்த மகன் சிவபாண்டியன் வேளாண்மைத் துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். மற்றொரு மகனான ஐய்யப்பன் (எ) சண்முகபிரபு, வெளிநாட்டில் இருந்தவர் தனது தந்தை அமைச்சரானதும் சொந்த ஊருக்கு வந்து தந்தையின் இலாகாவையும், லோக்கல் அரசியலையும் கவனித்துக்கொண்டு பல சர்ச்சையிலும் சிக்கி வந்தார். ஐயப்பனின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் துரைக்கண்ணுவிற்கு தலையில் கத்தியாகவே அமைந்தது.  சமீபத்தில் ஐயப்பனுக்கு இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் மாவட்ட செயலாளராக பொறுப்பு  வழங்கினார்.

இந்தநிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் இறந்த தகவலை தெரிந்து கொண்ட துரைக்கண்ணு, அவசர அவசரமா கடந்த 13 ம் தேதி காலை சென்னையிலிருந்து சேலத்திற்கு காரில் சென்றார், அப்போது திண்டிவனம் அருகே கார் சென்று கொண்டிருந்த போது அமைச்சர் துரைக்கண்ணு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் துரைக்கண்ணு தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி இறந்து போனார்.

இது குறித்து காவிரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில்," எங்கள் மருத்துவமனையில் கடந்த 13ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக அமைச்சர் துரைக்கண்ணு அனுமதிக்கப்பட்டார், அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதோடு அவருக்கு ஏராளமான இணை நோய்களும் இருப்பது தெரியவந்தது. அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்ததில் அவரது நுரையீரல் 90 சதவிகிதம் பாதித்துவிட்டது. அவருக்கு  செயற்கை சுவாச கருவிகள் உதவியுடனே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது." என்று கூறியிருந்தனர். இந்த சூழலில் சிகிக்சை பலனின்றி இறந்துள்ளார்.

அமைச்சர் துரைக்கண்ணுவின் இறப்பு அதிமுகவினர் மத்தியில் பெருத்த சோகத்தை உண்டாக்கியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.