Skip to main content

நான் ஒரு கடைக்கண் பார்வையை காட்டினால் எடப்பாடி ரூ.100 கோடி கொடுக்க ரெடி: தங்கதமிழ்ச்செல்வன் பேச்சு

Published on 30/06/2018 | Edited on 30/06/2018
Thanga Tamil Selvan


மதுரை அருகே உசிலம்பட்டி தேனி சாலையில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக புதிய உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் தங்கதமிழ்ச்செல்வன் கலந்து கொண்டார். 
 

அப்போது தங்கதமிழ்ச்செல்வன் பேசியதாவது, 
 

இப்போது உள்ள அதிமுக அமைச்சர்கள் வரும் எந்த தேர்தலிலும் நிற்க முடியாது, மக்கள் அனைவரும் விழித்துக்கொண்டனர். உண்மையான அ.தி.மு.க.வினர் அனைவரும் அ.ம.மு.க.வில் உள்ளனர். வருகிற பாராளுமன்றத்தேர்தலில் பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி அமைத்தால் அவசியம் டெபாசிட்டை இழக்கும்.

 

 

 

இப்போதைய சூழ்நிலையில் நான் ஒரு கடைக்கண் பார்வையை காட்டினால் போதும், எடப்பாடி ரூ.100 கோடி கொடுக்க ரெடியாக இருக்கிறார். எங்களுக்கு பணம் முக்கியமில்லை, மக்களின் நலன்தான் முக்கியம். டி.டி.வி.தினகரன் தலைமையிலான ஆட்சி அமையும் வரை மக்களிடம் நம்பிக்கை துரோகிகளின் செயல்பாடுகளை எடுத்து கூறுவோம் என்றார்.


 

சார்ந்த செய்திகள்