Skip to main content

கோவில் உரிமை யாருக்கு? போலீசார் முன்னிலையில் அடிதடி 

Published on 27/05/2022 | Edited on 27/05/2022

 

temple issue  police front two sides clashed

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ளது சேவூர் கிராமத்தில் வரதராஜப்பெருமாள் கோயில் நீண்டகாலமாக இருந்து வருகிறது. கோவிலில் பல்வேறு தரப்பு மக்களும் சென்று வழிபட்டு வருகிறார்கள். பெருமாளுக்கு உகந்த முக்கிய திருவிழாக்கள் அவ்வப்போது நடந்து வந்தன. 

 

இந்த நிலையில் இந்தக்  கோயிலை ஒரு சமூகத்தினர் மட்டுமே உரிமை என கொண்டாடுவதாக மற்ற தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது சம்பந்தமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற பிரச்சினை எழுந்த நிலையில் அப்போதைய திட்டக்குடி டிஎஸ்பி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வரும் காலங்களில் அனைவரும் ஒன்று கூடி ஒற்றுமையுடன் கோயில் விழாவை நடத்துவது என பேசி முடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து இருதரப்பினர் இடையே அவ்வப்போது பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

 

இந்த நிலையில் கோயில் புனரமைப்பு செய்து வரும் 3ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக நேற்று(2022) காலை ஒரு தரப்பினர் மட்டும் கோயிலில் கம்பம் நடும் நிகழ்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இதைக் கண்டு ஆத்திரமடைந்த மற்ற தரப்பினர் கோவிலுக்கு சென்று அவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இந்த தகவல் அறிந்த வேப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் முற்றி போலீசார் முன்னிலையில் உருட்டுக் கட்டையால் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ள முயன்றனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் இடையில் புகுந்த அவர்களை தடுத்து நிறுத்தி அமரவைத்து சமாதானம் செய்தனர். 

 

இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் வரும் 28ஆம் தேதி விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் சமாதான கூட்டத்தில் கலந்து கொண்டு அதன் பிறகு கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்று பேசி முடிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அனைவரும் கோவிலில் இருந்து கலைந்து சென்றனர். போலீசார் முன்னிலையில் உருட்டுக்கட்டை எடுத்துக்கொண்டு அடிக்க சென்ற சம்பவம் வேப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.