Skip to main content

பள்ளி தலைமை ஆசிரியரை தாக்கிய தாளாளர்; மாணவர்கள் சிறைவைக்கப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சி

Published on 12/04/2023 | Edited on 12/04/2023

 

The teacher who assaulted the school headmaster; Students are shocked by the incident of imprisonment

 

அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியரை பள்ளியின் தாளாளர் பள்ளி வளாகத்திலேயே வைத்து தாக்கியதோடு, மாணவர்களையும் சேர்த்து பள்ளியைப் பூட்டிவிட்டுச் சென்ற சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தேனி திட்டச்சாலையில் மகாராஜா தொடக்கப்பள்ளி என்ற அரசு உதவிபெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. சுமார் 30 மாணவர்கள் அந்த பள்ளியில் பயின்று வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியராக சென்றாயபெருமாள் பணியாற்றி வருகிறார். ஒரு ஆசிரியையும் அந்த பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். அப்பள்ளியின் தாளாளர் அன்பழகன் மகாராஜா தொடக்கப் பள்ளியில் தாளாளராக இருப்பதை மறைத்து தேனி அல்லிநகரம் பகுதியில் செயல்பட்டு வரும் முத்தையா அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

 

The teacher who assaulted the school headmaster; Students are shocked by the incident of imprisonment

 

இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் கல்வித்துறை அதிகாரிகளுக்கு அவ்வப்போது சென்றுள்ளது. ஆனாலும் அன்பழகன் பணத்தை கொடுத்து அதிகாரிகளை சரிகட்டிவிடுவதாகக் கூறப்படுகிறது. தான் ஒரு பள்ளியில் தாளாளராக இருந்துகொண்டு மற்றொரு பள்ளிக்கு தலைமை ஆசிரியராக இருப்பது குறித்து தலைமை ஆசிரியர் சென்றாயபெருமாள் தான் புகார் அளிக்கிறார் என எண்ணிய அன்பழகன்  சென்றாயபெருமாள் மற்றும் ஆசிரியையை அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளார். அதேபோல் சம்பளமும் கொடுக்காமல் அவர்களை அலைக்கழித்துள்ளார்.

 

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டு ஆசிரியர்கள் இருவருக்கும் அரசிடம் இருந்து நேரடியாக சம்பளம் வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த அன்பழகன், தலைமை ஆசிரியர் சென்றாயபெருமாள் உடன் தகராறு செய்ததோடு மாணவர்கள் முன்னிலையில் அவரை ஆபாசமாகப் பேசித் தாக்கியுள்ளார். பின்னர் ஆசிரியர் மற்றும் மாணவர்களையும் உள்ளே வைத்து பள்ளியை பூட்டிவிட்டுச் சென்று விட்டார்.

 

The teacher who assaulted the school headmaster; Students are shocked by the incident of imprisonment

 

இது குறித்து மாணவர்களிடம் விசாரித்த பொழுது மாணவர்கள், “தாளாளர் அன்பு சார் எங்க சார அடித்து தூக்கி போட்டுவிட்டு பூட்டு போட்டுவிட்டு போய்விட்டார்” என வேதனையோடு தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் காவல் அதிகாரிகளோடு வந்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியையிடம் விசாரணை நடத்தி அங்கிருந்து மாணவர்களை மீட்டுக் கொண்டு வந்தனர். தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பள்ளியின் தாளாளர் அன்பழகன் தற்போது தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.