Skip to main content

புயல் தாக்கும் அபாய நேரத்திலும் மூடாத டாஸ்மாக் கடைகள்...

Published on 25/11/2020 | Edited on 25/11/2020

 

 

நிவர் புயல் தாக்கும் என்ற காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. வங்கிகளுக்கும் கூட விடுமுறை விடப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் மழை காரணமாக பாதிப்புக்கு ஆளாகும் பகுதிகள் என 278 பகுதிகள் கண்டறியப்பட்டு அப்பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

 

மேலும் பொதுமக்களுக்கென 28 பாதுகாப்பு முகாம்களும், 191 தற்காலிக பாதுகாப்பு முகாம்களும் தயார் நிலையில் உள்ளன. மாவட்டத்தில் முதல் தகவல் அளிப்பவர்கள், கால்நடை பாதுகாப்பு மையம் மற்றும் பாம்பு பிடிப்பவர்கள், நீச்சல் வீரர்கள், ஆம்புலன்ஸ் சேவை ஓட்டுநர்கள் இப்படி அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

 

பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்களை முகாம்களுக்கு உடனடியாக அழைத்து வருவதற்கு மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் தேவையான உணவுப் பொருட்கள், சமையல் செய்ய கேஸ் சிலிண்டர்கள், அடுப்புகள், குடிநீர், கழிவறை, மின்வசதி உட்பட அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. இப்படிப்பட்ட காலத்தில் வீட்டைவிட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

கரோனா பரவலை தடுப்பதற்கு போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு போல பொதுமக்கள் காரணமின்றி யாரும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அரசு தெரிவித்துள்ளது. இவ்வளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மட்டும் வழக்கம்போல் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது. புயல் தாக்கம் உள்ள இந்த நேரத்தில் டாஸ்மாக்  ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்கள் மீது அக்கறை கொள்ளாத தமிழக அரசுக்கு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

 

பேருந்துகள் இயங்கவில்லை. அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை. வங்கிகள் இயங்கவில்லை ஆனால் டாஸ்மாக் கடைகள் மட்டும் இயங்கவேண்டும் என்று அரசின் நிலைப்பாடு ஏன் என்று அதன் ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படுத்தியுள்ளது. ஒரு பக்கம் மக்களின் உயிரையும், உடமைகளையும் பாதுகாக்கும் வண்ணம் முகாம்களை அமைத்து தங்க வைப்பதும் வீடுகளை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தும் அரசு, டாஸ்மாக் கடை திறந்தால் அங்கே குடிப்பதற்கு வரும் ஏழை எளிய மக்களுக்கும் கடை ஊழியர்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படாதா? அரசின் நிலைப்பாடுகளில் ஏன் இப்படிப்பட்ட முரண்பாடுகள் எனக் கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள். 

 

இந்நிலையில் தமிழக அரசு செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் பிற மாவட்டங்களில் சூழலுக்கு ஏற்ப மாவட்ட ஆட்சியர்கள் மதுக்கடைகளை மூடலாம் எனத் தெரிவித்துள்ளது. 

 

அதனை அடுத்து கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உட்பட சில மாவட்டங்களில் டாஸ்மாக் கடையை மூடுமாறு தற்போது அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்துள்ளதையடுத்து கடைகள் மூடப்படுகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்ட பாட்டியை கொன்ற பேரன்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Grandson attack grandmother for drunkenness

குடிப்பழக்கத்தை கண்டித்த பாட்டியை பேரனே கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ளது சாரூர். இந்த பகுதியில் வசித்து வந்தவர் தாசம்மாள் (80). இவருடைய மகன் புஷ்பராஜ் என்பவருக்கு அஜித் மகன் இருக்கிறார். அவருக்கு வயது 23.

குடும்ப பிரச்சனை காரணமாக புஷ்பராஜின் மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால் புஷ்பராஜூம் அவருடைய மகன் அஜித்தும் தாசம்மாளுடன் வசித்து வந்தனர். அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் புஷ்பரஜ் இறந்து விட்டார் .

அதன் பிறகு பாட்டியுடன் அஜித் மட்டும் வசித்து வந்தார். அந்த பகுதியில் பெயிண்டிங் வேலைகளுக்கு சென்று வந்த அஜித் குடிப்பழக்கத்திற்கு நாளடைவில் அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாட்டி  தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட் நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்கும்படி அஜித் மது அருந்திவிட்டு ரகளை செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று இரவு 11 மணிக்கு மது குடித்துவிட்டு வந்த அஜித் பாட்டி தாசதாசம்மாளிடம் இது தொடர்பாக சண்டை போட்டுள்ளார். அப்பொழுது பாட்டி தட்டி கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அஜித் தாசம்மாளை கீழே தள்ள, சுவரில் தலை மோதி சம்பவ இடத்திலேயே தாசம்மாள் உயிரிழந்தார். தான் தாக்கியதால் பாட்டி இறந்ததை அறிந்துகொண்ட அஜித் பயத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.