Published on 23/06/2020 | Edited on 23/06/2020

தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் தருமபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் இரண்டு நாட்களுக்குசீன் செல்ல வேண்டாம். வெப்பச் சலனம், தென்மேற்குப் பருவமழையால் தென் தமிழக, வட தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.