Skip to main content

"தமிழக உரிமைகளை விட்டுத் தர மாட்டோம்"- துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திட்டவட்டம்!

Published on 28/04/2020 | Edited on 28/04/2020

 

tamilnadu deputy cm panneer selvam statement in corona virus union government


தமிழகத்தின் உரிமைகளையும் தமிழக மக்களின் நலன்களையும், யாருக்காகவும் யாரிடமும் விட்டுக் கொடுக்காமல் தமிழக அரசு தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு வருகிறது எனத் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது, "தமிழக பட்ஜெட்டின் போது நான் கூறியதில் ஒரு பகுதியை மட்டும் குறிப்பிட்டு, அப்போது துணை முதல்வர் மத்திய அரசை விமர்சித்தார். தற்போது நிலை மாறி விட்டார் என எதிர்க்கட்சித் தலைவர் கூறியது முற்றிலும் தவறானது. 

ஒவ்வொரு ஆண்டும் நிதிக்குழுப் பரிந்துரை அடிப்படையில் மத்திய வருவாயில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி அளிக்கப்படும் என்பதை மத்திய அரசு குறிப்பிடும், அதன்பின் ஒவ்வொரு மாதமும் தவணை முறையில் இந்த நிதியை மத்திய அரசு, மாநிலங்களுக்கு விடுவிக்கும். ஏற்றத்தாழ்வுகள் இருப்பின் முந்தைய ஆண்டு தணிக்கைத்துறை தலைவரால் சான்றிளிக்கப்பட்ட இறுதி வருவாய் ஈட்டல் அடிப்படையில் நடப்பு நிதியாண்டில் விடுவிக்க வேண்டிய தொகைகள் சரிசெய்யப்படும். 
 

http://onelink.to/nknapp


அந்த அடிப்படையில் தான் 2019- 20 ஆம் ஆண்டு திருத்திய மதிப்பீடுகளில் தமிழகத்துக்கு வர வேண்டிய வருவாய்ப் பங்கு தொகை குறைந்து விட்டது இதற்கும் 15- ஆவது நிதிக்குழு பரிந்துரைப்படிகளுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை.

தமிழக மக்களுக்கும் ஒரு போதும் அநீதி ஏற்படக் கூடாது என்பதுதான் எங்களின் கொள்கை அதிலிருந்து நாங்கள் சிறிதும் பின்வாங்கவில்லை; பின்வாங்கவும் மாட்டோம். தமிழக அரசின் 2020- 21 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 15- ஆவது நிதிக்குழு பரிந்துரையின் மீது தமிழக அரசு தன் நிலையை தெளிவாக எடுத்து வைத்துள்ளது. இந்திய நாடும் தமிழகமும் கொடூரமான கரோனா நோயை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் மக்களுக்குச் செய்ய வேண்டிய உடனடி பணிகள் குறித்து கவலைப்படாமல் பல முறை தெளிவுபடுத்தப்பட்ட பிரச்சனைகள் குறித்து தேவையில்லாத சர்ச்சைகளை மீண்டும் மீண்டும் கிளறுவது கண்டிக்கதக்கது.' இவ்வாறு துணை முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.