Skip to main content

மரண வலி! -ஆரூர் தமிழ்நாடன்

Published on 12/05/2020 | Edited on 12/05/2020

 

villupuram thiruvennainallur




நேர்ந்துவிட்ட கண நேர
கொடூரத்தில்
வெட்கிச் சாகிறது தீ!
*
பகை கூட
இப்படியொரு பகையைச்
சந்திக்கக் கூடாது.
சிறுமைபட்டு நிற்கிறது
சிறுமதுரை.
*
பெண் பிள்ளைகளைப் பெற்ற

தகப்பன்களை எல்லாம்
மரண வலியுடன் 
கை பிசைய வைக்கிறது 
‘அப்பா எங்கே?’ என்ற 

அந்த ஈர குரல்;
ஈரக் குலைக்குள் 

தீயாய் ஊடுருவும்

ஈரக் குரல்
*
வன்மம்

இவ்வளவு வன்மமானதா?
மனிதவடிவில்

இப்படியும் 
கோர மிருகங்களா?
பழிவாங்கும் உணர்வை
ஒரேயடியாய்ப் 
பழிவாங்கிவிட்டார்கள் 
பாவிகள்.
*
ஜெயஸ்ரீக்களே!
இந்த பூமிக்கு
எந்த நம்பிக்கைக்கையில் 
வந்தீர்கள்?
இது மரிப்பதற்கு மட்டுமான
மயான பூமி.
இங்கே
புன்னகை மலர்களுக்கு
இடமில்லை.
*
உலக உருண்டை
உயிர்ப்பற்ற 
மண்ணுருண்டை ஆகிவிட்டது.
அவர்களால்.
*
 


 

சார்ந்த செய்திகள்