
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் படித்து சாதனை படைத்துள்ள முன்னாள் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா என்.ஐ.டி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பி.டி.பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் படித்த முன்னாள் மாணவர்கள் 17 பேருக்கு சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டது.
இதில் முன்னாள் மாணவர் என்ற அடிப்படையில், தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு, பொது நிர்வாகத்துறையின் சாதனையாளர் என்ற விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் தேசிய தொழில்நுட்ப கழகத்தின் இயக்குநர் அகிலா, இந்திய தொழில்நுட்ப மேலாண்மை கழகத்தின் இயக்குனர் பவன்குமார் சிங், முன்னாள் மாணவர் சங்க தலைவர் மகாலிங்கம், தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் தலைவர் பாஸ்கர் பட் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.