Skip to main content

சமூக வலைதளங்களில் பெண்கள் குறித்து அவதூறு.... காவல்துறையிடம் புகார் அளித்த சுந்தரவள்ளி! (படங்கள்)

Published on 14/07/2021 | Edited on 14/07/2021

 

தமிழ்நாட்டில் தொடர்ந்து பெண்கள் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறாகவும், ஆபசமாகவும் பாஜக, நாம் தமிழர் மற்றும் இந்துத்துவா அமைப்புகள் பேசிவருகின்றனர். அதனால் நேற்று (13.07.2021) காலை 10.00 மணிக்கு தமிழ் சைவப்பேரவையைச் சேர்ந்த கலையரசி நடராசன் அம்மா, பொதுவுடமை சிந்தனையாளரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளருமான சுந்தரவள்ளி, மாதர் சங்கங்கள், முற்போக்கு இயக்கங்கள் இணைந்து சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன் பின்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்