Skip to main content

வலுத்த எதிர்ப்பு; வாபஸ் பெற்ற அமித்ஷா

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
strong opposition; Amit Shah withdrew

குற்றவியல் சட்டங்களின் பெயரை மாற்றும் முடிவை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் 3 குற்றவியல் மசோதாக்கள் இந்தியில் பெயர் மாற்றப்பட்டு தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள அறிவிப்பில், முடிவை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளார். 

இந்திய தண்டனைச் சட்டம்; குற்றவியல் நடைமுறை சட்டம்; இந்தியச் சான்று சட்டம் ஆகியவற்றினுடைய பெயர்கள் இந்தியில் மாற்றப்பட்டது. இந்திய தண்டனை சட்டத்தின் பெயரை பாரதிய நியாய சங்ஹீத எனவும், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பெயரை பாரதிய நாகரிக் சுரக் ஷ சங்ஹீத எனவும், இந்திய சான்று சட்டத்தின் பெயரை பாரதிய சக்ஷயா  எனவும் மாற்ற பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இதற்கான மசோதாக்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், அந்த சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் மற்றும் சட்ட துறையினரின் எதிர்ப்பின் காரணமாக தனது முடிவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மத்திய அரசின் இந்த முடிவு தெரிய வருகிறது. இந்த மூன்று மசோதாக்களும் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், பெயரை மாற்றும் முடிவை வாபஸ் பெற்றுள்ளது ஒன்றிய அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

நாடாளுமன்றத்தில் ஹெலிகாப்டர் மூலம் இறங்கிய என்.எஸ்.ஜி வீரர்கள்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
NSG soldiers landed in parliament by helicopter

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் நாடாளுமன்ற வளாகத்துக்குள் இறங்கி ஒத்திகை நிகழ்வில் ஈடுபட்டனர்.

சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பார்வையாளர் மாடத்தில் இருந்து  அத்து மீறி சிலர் வண்ணத்தை உமிழும் பொருட்களை எடுத்துக்கொண்டு நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்திற்குள் ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதனையடுத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து பல்வேறு விமர்சனங்களையும் கருத்துகளையும் வைத்திருந்தனர். இந்நிலையில் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக என்.எஸ்.ஜி வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் டெல்லி நாடாளுமன்றத்தின் வளாகத்திற்குள் இறங்கி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.

Next Story

அமித்ஷாவின் தமிழக பயணம் திடீர் ரத்து 

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
 Amit Sh's trip to Tamil Nadu was suddenly canceled

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4ஆம் தேதி (இன்று) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 4 ஆம் தேதி தமிழகம் வருவதாக இருந்த அமித்ஷா மதுரை மற்றும் சிவகங்கை, கன்னியாகுமரி, தென்காசி தொகுதிகளில் ரோட் ஷோ மற்றும் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சில தவிர்க்க முடியாத காரணத்தால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.