Skip to main content

சிலை கடத்தல் வழக்கு... இன்று தீர்ப்பு...

Published on 30/11/2018 | Edited on 30/11/2018

 

சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றி அரசாணை பிறப்பித்ததற்கு எதிராக யானை ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிந்திருந்தார். இந்த வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கவிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். இந்த வழக்கில் மதியம் 1.45 மணிக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு தீர்ப்பளிக்கிறது. சிபிஐக்கு மாற்றி பிறப்பித்த அரசாணைக்கு ஏற்கனவே நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்திருந்ததும், சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வுபெறும் நிலையில் தீர்ப்பு வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்