Skip to main content

உஷாவுக்காக அமைதியாக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீதும் தடியடி: ஸ்டாலின் கண்டனம்

Published on 08/03/2018 | Edited on 08/03/2018

 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (08—03-2018) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு:

’’திருவெறும்பூரில் ஹெல்மெட் அணியாததால் காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பெண் உஷா உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். மனிதநேயமற்ற இச்செயல் வேதனையளிப்பதோடு, இதனைக்கண்டித்து அமைதியாக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீதும் தடியடி நடத்தியது கடும் கண்டனத்திற்குரியது.’’
 

சார்ந்த செய்திகள்