Skip to main content

நெல்லையில் பரபரப்பு.... 30 முட்டைகளுடன் அடை காத்த ஏழு வயது மலைப்பாம்பு சிக்கியது!!

Published on 05/07/2019 | Edited on 05/07/2019

நெல்லை மாவட்டம் பாளை கக்கன் நகர் அருகே கிருபா நகர் பகுதியில் உள்ள இங்கு ஒரு மீன் பண்ணை அமைந்துள்ளது. இதன் பின்புறமுள்ள முல்லைச் செடிகள் நிறைந்த பகுதியில் மலைப்பாம்பு நடமாட்டம் இருந்துள்ளது.

 A seven-year-old python caught with 30 eggs in nellai


இது குறித்து அப்பகுதியினர் பாளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு நிலைய அலுவலர் வீர ராஜா, முருகன், பாலன் உலகமுத்து மற்றும் வீரர்கள் விரைந்து சென்று அந்தப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு புதருக்குள் பதுங்கியிருந்த 11 அடி நீளம் மலைப்பாம்பை பிடிக்க நீண்ட நேரம் போராடினார். இதையடுத்து பாம்பு பிடிக்கும் நிறுவுனர் ராமேஸ்வரம், வனத்துறை ஊழியர் பால்பாண்டி ஆகியோர் உதவியுடன் புதருக்குள் இருந்த மலைப் பாம்பையும் அதன் 30 முட்டைகளையும் மீட்டனர். பிடிபட்ட பாம்பு மற்றும் முட்டைகள் வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையினர் அவற்றை பொன்னாக்குடியில் சமூக வனக்காடு பராமரிப்பு அலுவலகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது.

 A seven-year-old python caught with 30 eggs in nellai


இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில் சமீப நாட்களாக இப்பகுதியில் ஆட்டுக்குட்டி, கோழி போன்றவைகள் காணாமல் போனது. மலைப்பாம்பு நடமாட்டம் இருந்ததால் நாங்களும் அதனைத் தேடி வந்தோம். இப்பகுதியிலுள்ள ஒரு புதருக்குள் பாம்பு ஊர்ந்து சென்றதை கவனித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தோம். பாம்பு இவ்வளவு முட்டைகளுடன் சிக்கியது ஆச்சரியமாக இருக்கிறது என்றார்.

இது குறித்து வனத்துறையின் கால்நடை டாக்டர் சுகுமார் கூறுவது.

நெல்லை பகுதியில் 92ன் ஆண்டு பெய்த பெரும் மழை வெள்ளத்தின் போது ஏராளமான மலைப்பாம்புகள் தாமிரபரணியில் அடித்து வரப்பட்டது. இவை ஆங்காங்கே கரை ஒதுங்கி இனப்பெருக்கம் செய்தன. அப்போது முதல் மலைப்பாம்புகள் நீர் நிலைகளிலும் கரையோரங்களிலும் அடிக்கடி பிடிபடுகின்றன.

 

 A seven-year-old python caught with 30 eggs in nellai


ஆனால் முட்டைகளுடன் இப்பகுதியில் மலைப்பாம்பு பிடிபட்டது இதுவே முதல்முறை. இந்த பாம்பிற்கு ஏழு வயது இருக்கலாம் 19 கிலோ எடை உள்ளது. மலைப்பாம்புகள் ஆண்டிற்கு முதல் மூன்றுமுறை முட்டைகள் இடும். ஒரு முறை 20 முதல் 35 முட்டைகள் வரை இடும் குஞ்சு பொறிக்கும். இவை 40 வயது வரை வாழும் தன்மையுடையது.

அடுத்த 35 நாட்களுக்கு பின்னர் குஞ்சுகள் வெளியில் வரும். தற்போது 35 நாட்கள் கழிந்து விட்டதால் தாய் பாம்பின் அடை காப்பு தேவை இல்லை. இதனால் தாய் பாம்பை மட்டும் மணிமுத்தாறு தலையணை அருவி பகுதியில் இயற்கை சூழலில் விட்டுவிடுவோம் 30 முட்டைகளை அதற்கு தேவையான வெப்பநிலை நிலையில் பாதுகாத்து குஞ்சுகள் வெளியேவர ஏற்பாடு செய்வோம் பின்னர் அவை பத்திரமாக வனப்பகுதியில் விடப்படும் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கட்டுப்பாட்டை இழந்த லாரி; தப்பிக்குதிக்க முயன்ற ஓட்டுநர் உயிரிழப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
bb

கட்டுப்பாட்டை இழந்த லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பிக்க முயன்ற லாரி ஓட்டுநர் லாரியின் டயரிலேயே சிக்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது.

நெல்லையில் இருந்து சிவகாசி நோக்கி பழைய பேப்பர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி இனாம்மணியாச்சி பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. லாரியை தூத்துக்குடி சேர்ந்த இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (60 வயது) என்பவர் லாரியை ஓட்டிக் கொண்டிருந்தார். இரவு வேளையில் திடீரென சாலையின் தடுப்பு மீது மோதிய லாரி கட்டுப்பாட்டை இழந்து  தாறுமாறாக ஓடியது. லாரி கட்டுப்பாட்டை இழந்தவுடன் எகிறி குதித்து தப்பித்துக் கொள்ளலாம் என வெளியே குதித்த ஓட்டுநர் லாரியினுடைய சக்கரத்திலேயே விழுந்து உயிரிழந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஓட்டுநர் ராமகிருஷ்ணன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.