Skip to main content

கள்ள மது பாட்டில்கள் விற்பனை! களத்தில் இறங்கிய பொதுமக்கள்! 

Published on 06/01/2022 | Edited on 06/01/2022

 

Selling counterfeit wine bottles! Public on the field!

 

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் இரு மதுக்கடைகள் இயங்கிவந்தன. அவை இரண்டும், பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் முக்கியச் சாலையில் இருந்தன. இதனால், அந்தச் சாலையில் செல்லும் மக்களும், மாணவர்களும், பெண்களும் பெரும் இன்னல்களுக்கு ஆளாகிவந்தனர். 

 

அதன் காரணமாக, அந்த இரண்டு மதுக் கடைகளையும் மூட வேண்டும் என பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக அப்போதைய மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ், அம்மதுக்கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து கீழக்கரையில் மதுக்கடைகள் மூடப்பட்டன. 

 

கீழக்கரையில் மதுக்கடைகள் இல்லாததை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சிலர் கள்ளத்தனமாக வேறு இடங்களிலிருந்து மதுபானங்களை வாங்கிவந்து கீழக்கரையில் விற்றுவருகின்றனர். இதனால், மீண்டும் கீழக்கரையில் மது குடிப்போரின் தொல்லைகள் அதிகமாகிவந்தன. 

 

இந்நிலையில், கீழக்கரை இஸ்லாமிய பள்ளி தாளாளர் முகைதீன் இபுறாஹீம், முன்னாள் கவுன்சிலர்கள் சாகுல் அமீது, மணிகண்டன், கஜேந்திரன், மகேஷ் பாதுஷா, நூறுள் ஜமான் ஆகியோர் தலைமையில் ஊர் முக்கிய பிரமுகர்களை அழைத்து நேரடியாக இன்று கீழக்கரை புதிய பஸ் நிலையம் அருகே சென்று அங்கு கள்ளத்தனமாக மது விற்பனை செய்துவந்தவர்களை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும், விற்பனை செய்து கொண்டிருந்த மது பாட்டில்களையும் காவல்துறையிடம்  ஒப்படைத்தனர்.

 

பொதுநல நோக்குடன் தைரியமாக களத்தில் இறங்கிய கீழக்கரை பொதுமக்கள் மது பாட்டில்களுடன் காவல் நிலையம் சென்று புகார் அளித்து மீண்டும் அப்பகுதியில் விற்பனை நடைபெற்றால் போராட்டம் நடத்தப்படும் என அங்கிருந்த எஸ்.எஸ்.ஐ. தேவேந்திரனிடம் தெரிவித்தனர்.

 

இதுபற்றி நாம் கீழக்கரை காவல் துணை கண்காணிப்பாளர் சுபாஷிடம் கேட்டபோது, “விசாரணை நடைபெற்று வருகிறது. யார் மது பெற்றாலும் அவர்கள் மீது நடவடிக்கை கடுமையாக இருக்கும். அங்கு தினந்தோறும் காவல்துறை அதிகாரிகளை அனுப்பி கண்காணிக்க இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.

Next Story

''குசும்ப பாருங்க... வாட்ஸ் அப்பில் இப்படியெல்லாம் பரப்புகிறார்கள்''-ஓபிஎஸ் ஆதங்கம்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
They are spreading all this on WhatsApp" - OPS

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் பரப்புரையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய சின்னத்தை திராட்சை கொத்து என பலர் வாட்ஸ் அப்பில் தவறாக பரப்புவதாக குற்றச்சாட்டையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ராமநாதபுரத்தில் திறந்தவெளி வேனில் பிரச்சாரம் மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ''நான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுபவர்கள் மூன்று சின்னங்களைக் குறிப்பிட வேண்டும். நான் மூன்று சின்னங்களைக் குறிப்பிட்டு கொடுத்திருந்தேன். இப்பொழுது நிறைய பன்னீர்செல்வங்கள் வந்து விட்டார்கள். என்னுடன் சேர்த்து ஆறு பன்னீர்செல்வம். மற்ற ஐந்து பேரும் நான் என்னென்ன சின்னம் எழுதிக் கொடுத்தேனோ அதே சின்னத்தை எழுதி கொடுத்திருக்கிறார்கள். ஒரு குழப்ப சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று அப்படி செய்துள்ளார்கள். இப்பொழுது என்ன செய்திருக்கிறார்கள் என்றால், குசும்பு பாருங்க, ஓபிஎஸ் சின்னம் வாளி என வாட்ஸ் அப்பில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓபிஎஸ் சின்னம் திராட்சை கொத்து என வாட்ஸ் அப்பில் பரப்புகிறார்கள்.

நான் எழுதிக் கொடுத்த மூன்று சின்னங்களையும் ஓபிஎஸ் சின்னம் ஓபிஎஸ் சின்னம் என்று செல்லில் இன்று பறக்கவிட்டு வருகிறார்கள். இது எவ்வளவு கீழ்த்தரமான அரசியல். ஒரு சின்னத்தை இரண்டு வேட்பாளர்கள் கேட்டால் குலுக்கள் முறையில் கொடுப்பார்கள். சின்னம் ஒதுக்குவது குறித்து நேரம் காலம் ஒதுக்கப்பட்டது. உங்களுடைய வாழ்த்துக்களால், ஆசிர்வாதத்தால் நீங்கள் தந்த வரத்தினால் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் சின்னம் கிடைத்துள்ளது. அது உங்களால் தான் கிடைத்தது. உங்கள் ஆசியால் எனக்கு இந்தச் சின்னம் கிடைத்தது''என்றார்.