Skip to main content

திருச்சியில் தனியார் கல்லூரி உணவகத்திற்கு சீல்

Published on 16/08/2023 | Edited on 16/08/2023

 

 

Sealing of private college canteen in Trichy

 

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரபல பெண்கள் கலைக் கல்லூரியில் சனிக்கிழமை இரவில் இருந்து சுமார் 50 மாணவிகளுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் மருத்துவம் பார்த்த வண்ணம் இருந்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரைத் தொடர்ந்து, திருச்சி உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஆர். ரமேஷ்பாபு தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் ஸ்டாலின் செல்வராஜ், வசந்தன், பொன்ராஜ் மற்றும் பாண்டி ஆகியோர் அந்த கல்லூரியின் உணவகத்தை ஆய்வு செய்து வந்தனர். பின்னர் மாணவிகள் உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் வண்ணம் உணவு உற்பத்தி ஆவதற்கு வாய்ப்பு இருப்பதாக அறிந்து அந்த கல்லூரியின் உணவகம் தற்காலிகமாக  உணவு தயாரிக்கத் தடை செய்யப்பட்டது

 

மேலும், மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு கூறுகையில், “தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமையில் இருந்து அங்கு சமைக்கப்படும் உணவுகளை  உட்கொண்டு மாணவிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதனையடுத்து இது குறித்து புகார் அளிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து, தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. மாணவிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட என்ன காரணம் என்பதை அறிய உணவுப் பாதுகாப்புத் துறையின் கீழ் இரண்டு சட்டப்பூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவுப் பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உணவுப் பகுப்பாய்வு அறிக்கை வரப்பெற்றதை அடுத்து இங்கு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்