Skip to main content

கருவிலுள்ளது ஆணா பெண்ணா? சேலத்தில் தனியார் ஸ்கேன் மையத்திற்கு சீல்!!

Published on 27/10/2018 | Edited on 27/10/2018

கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து தகவல் தெரிவித்த ஸ்கேன் மையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

 

 Seal for Private Scan Center in Salem !!

 

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே இயங்கி வந்த அரவிந்த் ஸ்கேன் எனும் தனியார் ஸ்கேன் மையத்தில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்ற பாலினம் குறித்த தகவல்களை மருத்துவர் கண்ணன் தெரிவிப்பதாக வந்த  தகவலை அடுத்து இதுகுறித்து சென்னை ஊரக சுகாதாரத் துறை, காவல் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  

 Seal for Private Scan Center in Salem !!

 

இதனை அடுத்து நேற்று இரவு அவர்கள் மேற்கொண்ட சோதனையில் அரவிந்த் ஸ்கேன் மையத்தில் மருத்துவர் கண்ணன் அங்கு சிகிச்சைக்கு வரும் கருவுற்றவர்களின் வயிற்றில் உள்ள குழந்தை ஆணா பெண்ணா என்ற தகவல்களை அளித்து வந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த ஸ்கேன் மையத்திற்கு  சீல் வைக்கப்பட்டது.

 

சார்ந்த செய்திகள்