Skip to main content

ஆஹா ஸ்கூல் திறந்தாச்சு... உற்சாகம்... குதூகலம்... கொண்டாட்டம்...!

Published on 01/09/2021 | Edited on 01/09/2021

 

school opening ... excitement ... excitement ... celebration ...!

 

தமிழகத்தில் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாகப் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் சென்ற வருடம் முதல் மூடப்பட்டிருந்தன. எனினும் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்காத வகையில் அவர்களுக்குக் கல்வித் தொலைக்காட்சி, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதில் மாணவ- மாணவிகள் பங்கேற்று வந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா தாக்கம் குறையத் தொடங்கியதால், ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் செப்டம்பர் 1 ந் தேதி 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளுடன் தான் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளது. 1 ந் தேதி காலையிலிருந்தே மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் அவரவர் பள்ளிகளுக்கு வந்தனர். இதேபோல் கல்லூரிகளும் 1ந் தேதி முதல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது.

 

பள்ளி, கல்லூரிகள் திறப்பையொட்டி தூய்மைப்படுத்தும் பணி கடந்த சில நாட்களாகத் தமிழகம் முழுக்க நடந்து வந்தது. ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் திறக்கப்பட்டது. மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 395 பள்ளிகளில் 9 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் நேரடியாக தொடங்கப்பட்டது. ஏற்கனவே மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. காலையிலேயே மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர். பள்ளி வளாகத்தில் தனி மனித இடைவெளியைக் கடைப்பிடித்து வட்டங்கள் போடப்பட்டு இருந்தன. அதில் மாணவ, மாணவிகள் நின்று அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப நிலைப் பரிசோதனைச் செய்யப்பட்டது. முக கவசம் அணியாமல் வந்த மாணவர்களுக்குப் பள்ளி சார்பில் அந்தந்த தலைமை ஆசிரியர்கள் முக கவசம் வழங்கினார்கள்.

 

school opening ... excitement ... excitement ... celebration ...!

 

ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் இடைவெளிக் கடைப்பிடித்து அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆசிரியர்கள், பள்ளி பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசிப் போட்டுக்கொள்ள அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 98 சதவீத ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். மீதமுள்ள 2 சதவீத ஆசிரியர்களுக்கு தடுப்பூசிப் போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.பள்ளி வளாகத்திலும் வகுப்பறைகளிலும் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் குறித்தும் ஆங்காங்கே நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. வகுப்பறையில் நுழைவாயிலில் அவர்களுக்கு சானிடைசர் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஒரு பெஞ்சில் இடைவெளி விட்டு இரு மாணவர்கள் அமர்ந்திருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கி கொள்ள வேண்டாம், ஒருவர் உணவை மற்றவர்களுக்கு பகிர கூடாது ஒன்றாக அமர்ந்து, சாப்பிடவோ, பேசவோக் கூடாது என ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

 

பிளஸ் - 2, மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் அதாவது வாரத்திற்கு ஆறு நாட்கள் பாடங்கள் எடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பாடங்கள் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவ -மாணவிகள் பெரும்பாலும் பள்ளிக்கு ஆர்வத்துடன் வந்திருந்தனர். நீண்ட நாட்கள் கழித்து தங்களது நண்பர்கள், தோழிகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். முதல் நாள் பள்ளிகள் திறந்தாலும் மாணவ மாணவிகளுக்கு பாடங்கள் நடத்தப்படவில்லை.

 

school opening ... excitement ... excitement ... celebration ...!

 

பல்வேறு காரணங்களால் பள்ளிக்கு வர முடியாத மாணவர்களுக்கு வழக்கம்போல் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டன. ஈரோடு கருங்கல்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர். பள்ளியில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது.

 

அதேபோல் ஈரோட்டில் கல்லூரிகளும் திறக்கப்பட்டன. மாவட்டத்தைப் பொறுத்தவரை வெளிமாநில மாணவ, மாணவிகளும் கல்லூரிகளில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். குறிப்பாக கேரளாவில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் இங்கு உள்ள விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர். தற்போது கேரளாவில் கரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் கேரளாவில் இருந்து வரும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேரளாவில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் கண்டிப்பாக கரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ் கையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 

school opening ... excitement ... excitement ... celebration ...!

 

மேலும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனை  நெகட்டிவ் என்கிற சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. சான்றிதழ் இல்லாத மாணவர்கள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை. இறுதியாண்டு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வாரத்தில் 6 நாட்களும் பாடங்கள் எடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்ற மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பாடம் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்லூரி பேராசிரியர்கள் தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே மாணவர்களுக்கு பாடம் எடுக்க அனுமதிக்கப்பட்டனர். தனித்தனியாக உணவு அருந்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சோப்புகள் வைக்கப்பட்டிருந்தன. கல்லூரி பொறுத்தவரை இன்று பெரும்பாலும் மாணவ, மாணவிகள் நேரடியாகக் கல்லூரிக்கு வந்திருந்தனர். வருடக்கணக்கில் பிரிந்திருந்த நண்பர்களைப் பார்த்து பரவசமடைந்தனர் மாணவர்கள்.
 

 

பிளஸ்- 2 மாணவி  சுவேதா கூறும்போது,

 

நான் கருங்கல்பாளையம் அரசு  மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தான் முடித்தேன் சென்ற வருடம் வீட்டிலேயே இருந்தேன். இப்போது பிளஸ் - 2 படித்து வருகிறேன். கரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால் ஆன்லைன் மூலம் வகுப்புகளில் பங்கேற்று வந்தேன். எனினும் பள்ளிகள் எப்போது திறக்கும் என்று எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு என்னுடன் படிக்கும் தோழிகளைக் காண்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஆன்லைன் மூலம் படிப்பதற்கும் பள்ளியில் வந்து நேரடியாக படிப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. எனக்கு ஏற்படும் சந்தேகங்களை இனி நான் நேரடியாக ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வேன்"  என்றார்.
 

பிளஸ் - 2 மாணவன்  ரஞ்சித்,

 

"நான் இவ்வளவு நாட்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளில் பங்கேற்று வந்தேன். ஆன்லைன் வகுப்புகளில் எனக்கு பல்வேறு  உடல் உபாதைகள் இருந்தன. ஆனால் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைகிறேன். நேரடியாக வகுப்புகளில் எடுக்கப்படும் பாடங்களை படித்தால் தான் நன்றாக இருக்கும். இது மட்டுமின்றி நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னுடன் படிக்கும் சக நண்பர்களைக் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.

 

school opening ... excitement ... excitement ... celebration ...!

 

பள்ளி திறப்பு குறித்து ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் கூறும்போது, ''ஈரோடு மாவட்டத்தில், 395 பள்ளிகள் திறக்கப்பட்டது. சுமார் ஒரு லட்சத்து 9 ஆயிரம் மாணவ மாணவிகள் பள்ளிக்கு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  9, 10, 11, 12ம் வகுப்பு மாணவ மாணவிகள் 1 ந் தேதி முதல் பள்ளிகளுக்கு வருகை தருகின்றனர். பள்ளி வளாகங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் எண்ணிக்கை சில பள்ளிகளில் அதிகமாக இருக்குமிடங்களில் 12 பத்தாம் வகுப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 6 நாட்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும்.  கூடுதல் மாணவர் இருக்கும் பள்ளிகளில்  9 , 11 வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள பகுதிகளில் தலைமை ஆசிரியர்கள் திட்டமிட்டு அந்த மாணவ மாணவிகளை சுழற்சி முறையில் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி திறந்த முதல் நாளில் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் வந்துள்ளனர். பெரும்பாலான பள்ளிகளில் பெற்றோர்களே குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்து வந்துள்ளனர். மாணவ-மாணவிகளின் வருகையில் சுழற்சி முறையில் மாறி வந்திருந்தாலும் அவர்களையும் அனுமதித்து மாலையில் வீடு திரும்ப அனுப்பி வைப்போம். தனியார், அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் விருப்பத்தின் பேரில் வீட்டிலிருந்தே படிப்பதற்கு விருப்பம் தெரிவித்தால் அதற்கும் வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வழங்கியுள்ளது. நேரடியாக வரக்கூடிய மாணவ மாணவிகளுக்கும் ஆன்லைன் மாணவ-மாணவிகளுக்கும் அனைத்து கற்றல் கற்பித்தல் முறைகளையும் வழங்க சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

 

"அங்கிள் சீக்கிரமா ஸ்கூலை திறங்க.. என் பிரண்ட்ஸ்களை, டீச்சர்களை பார்க்க ஆசையா இருக்கு" என முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சென்ற மாதம் ஒரு மாணவி வேண்டுகோள் வைத்தார்.அந்த கோரிக்கை ஒரு மாணவி உடையது மட்டுமல்ல பல லட்சம் மாணவ, மாணவியர்களின் ஏக்கம், எதிர்பார்ப்பாக இருந்ததைப் பள்ளி கல்லூரி திறந்த போது மாணவ சமுதாயத்தின் கொண்டாட்டம், குதூகலம், உற்சாகத்தின் மூலம் காண முடிந்தது.

 

 

 

சார்ந்த செய்திகள்