Skip to main content

சரத்பாபுவின் கடைசி ஆசை; நிறைவேற்றிக் காட்டிய தங்கை

Published on 23/05/2023 | Edited on 23/05/2023

 

Sarathbabupu's last wish; Younger sister who fulfilled

 

தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சரத்பாபு. இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய 'பட்டினப் பிரவேசம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பல மொழிகளில் கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார். குறிப்பாக முள்ளும் மலரும் படத்தில் இவர் நடித்த 'செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்' பாடல் மிகவும் பிரபலமானது. தொடர்ந்து அண்ணாமலை, முத்து உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

 

சமீபத்தில் ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உடல்நலக்குறைவால் சரத்பாபு காலமானார். அவருக்கு வயது 71. இவரது மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் ரஜினிகாந்த், ராதிகா, சரத்குமார், சுஹாசினி, சுரேஷ் சந்த்ரா உள்ளிட்ட பிரபலங்கள் சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று நேரில் அஞ்சலி செலுத்தினர்.

 

வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றாலும் திரைத்துறையில் தமிழ்நாடு தான் தமக்கு வாழ்வில் முக்கியமான இடமளித்ததால் தனது உடலை தமிழ்நாட்டில் தான் தகனம் செய்ய வேண்டும் என கடைசி ஆசையாக சரத்பாபு அவரது தங்கை சரிதாவிடம் தெரிவித்ததாகவும், அவரின் ஆசைப்படியே அவரது உடலை இத்தனை கிலோமீட்டர்கள் கொண்டு வந்து தமிழ்நாட்டில் இறுதி சடங்கு நடத்தினோம்  என்று அவரது தங்கை சரிதா தெரிவித்துள்ளார். அதன்படி சரத்பாபுவின் உடல் தி.நகரிலிருந்து கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள மயானத்திற்கு கொண்டு வரப்பட்டது. அந்த இறுதி ஊர்வலத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். பின்பு கிண்டி மயானத்தில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

 


 

சார்ந்த செய்திகள்