Skip to main content

"பிரதமர் உழவர் நிதி முறைகேட்டில் ரூ.123 கோடி பறிமுதல்" - ககன்தீப்சிங்பேடி பேட்டி!

Published on 24/10/2020 | Edited on 24/10/2020

 

Rs 123 crore confiscated from PM's farmer fun: Kagandeep Singh Bedi interview!

 

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள  மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளை ஆய்வு செய்வதற்காகக் கடலூர் மாவட்டத்திற்குத் தமிழக வேளாண் துறை உற்பத்தி ஆணையரும், கடலூர் மாவட்டத்திற்கான கரோனா கண்காணிப்பு அலுவலருமான ககன்தீப்சிங் பேடி நேற்று வருகை தந்திருந்தார். 
 

மாவட்டத்தில் மேற்கொள்ளப் பட்டுவரும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்த அவர்,  செய்தியாளர்களிடம் பேசுகையில் "தமிழகத்தில் நல்ல அளவுக்கு மழை பெய்துள்ளதால் நல்ல விளைச்சல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்டா பகுதிகளில் கடந்த ஆண்டு 2 லட்சத்து 90 ஆயிரம் ஹெக்டேரில் குறுவை பயிர் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.


30 ஆண்டுகளுக்குப் பின் 4.12 லட்சம் ஏக்கர் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சம்பா பருவத்தில் தமிழகம் முழுவதும் இதுவரை 5.90 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் இரண்டு மாதங்களில் 14 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

சாகுபடிக்காக 1.90 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உரம் தேவைப்படும் என்பதால் அதற்கான கொள்முதல் உத்தரவு வழங்கப்பட்டு இதுவரையில் 1.50 லட்சம் மெட்ரிக் டன் யூரியா பெறப்பட்டுள்ளது. 45 கிலோ யூரியா மூட்டைக்கு ரூபாய் 266.50 என்ற விலையில் விற்பனை செய்யப்படும். எந்தவொரு மாவட்டத்திலும் யூரியா தட்டுப்பாடு இருக்கக்கூடாது அதனை வேளாண்துறை அதிகாரிகள் உறுதி செய்துகொள்ள வேண்டும். யூரியா தட்டுப்பாடு எங்கேனும் ஏற்பட்டால் அதுகுறித்து உடனுக்குடன் தகவல் தெரிவித்தால், தடையின்றி யூரியா கிடைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் உரம், யூரியாக்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

பயிர் காப்பீடு தொடர்பாக புதிய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. எனவே அடுத்த வாரத்துக்குள் பயிர் காப்பீடு தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும். நெல்லுக்கு நவம்பர் 9ஆம் தேதியும், மக்காச் சோளத்துக்கு வரும் 31ஆம் தேதியும் கடைசி நாளாகும்" என்றார்.

 

cnc

 

மேலும் அவர் கூறுகையில், "பிரதம மந்திரி கிசான் நிதி திட்ட முறைகேடு தொடர்பாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் இந்த முறைகேட்டில் ஈடுபட்ட விவசாயி அல்லாதவர்களிடம் இருந்து இதுவரையில் ரூபாய் 123 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை இன்னும் ஒரு மாத காலத்திற்குள் திரும்பப் பெறப்பட்டுவிடும். 

 

மேலும், இந்த முறைகேட்டில் தொடர்புடைய 101 பேர், சி.பி.சி.ஐ.டி போலீசார் மூலம் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடலூர் மாவட்டத்தில் 95 சதவீதம் வரையில் பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளது" என்றார். 

 

இந்த ஆய்வின்போது கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி, காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ், கூடுதல் ஆட்சியர் ராஜகோபால் சங்கரா, கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் மற்றும் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.