Skip to main content

திருந்தி வாழப்போவதாக போலீசிடம் மனு அளித்த பிரபல ரவுடி

Published on 26/10/2018 | Edited on 26/10/2018

 

police



விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை சேர்ந்தவர் பிரபல ரவுடி கைப்புள்ள ராஜி (26). இவர் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரை சந்தித்து ஒரு மனு அளித்துள்ளார். அதில், தான் திருந்தி வாழப்போவதாக கூறியுள்ளார். 
 

கைப்புள்ள ராஜி மீது 5 கொலை வழக்கு உட்பட 25 வழக்குகள் நிலுவையில் உள்ளது. குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அறிவுரை கூறியதையடுத்து இந்த மனுவை அவர் காவல்துறை அதிகாரிகளிடம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. 
 

 


 

சார்ந்த செய்திகள்