Skip to main content

வ.உ.சி மைதான மேற்கூரை இடிந்து விபத்து

Published on 22/05/2023 | Edited on 22/05/2023

 

nellai

 

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மேற்கூரையானது சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 14 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவில் வ.உ.சி மைதானமானது புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மேற்கூரையானது இடி விபத்து காரணமாக சரிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக உள்ளே யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்