Skip to main content

மருத்துவக்கல்லூரிக்கு நோயாளிகளை பார்க்கவரும் உறவினர்களையும் நோயாளியாக்கும் அவலம்

Published on 23/03/2018 | Edited on 23/03/2018
ambulance

  

 புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி கடந்த ஆண்டு ஜீன் 9 ந் தேதி முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார். அதன் பிறகு புதுக்கோட்டை நகரில் தொண்டைமான் மன்னர்களால் கட்டப்பட்ட 130 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அரசு மருத்துவமனை, ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனைகளையும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கே கொண்டு சென்றனர். இதனால் போக்குவரத்துக்கு வழியின்றி நீண்ட தூரம் செல்ல வேண்டியும் பொதுமக்கள், நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனா. அதனால் பழைய மருத்துவமனைகளை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்து அனைத்துக் கட்சிகளும் போராடியும் பலனில்லை.


 
    இந்த நிலையில் தான் மருத்துவக்கல்லூரிக்கு நோயாளிகள், பார்வையாளர்கள் சென்று வர நகரப் பேருந்துகளை இயக்கினார்கள். ஆனால் நுழைவாயில் பகுதியில் தரையில் மிதியடி சிமென்ட் கற்கள் பதிக்கப்பட்டிருப்பதால் அரசுப் பேருந்துகள் வேகமாக சென்று திரும்ப முடியாமல் வழுக்கிக் கொண்டு நுழைவாயில் தூண்களில் மோதி இதுவரை 3 விபத்துகளில் 20 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து அதே மருத்துவமைனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அதனால் தரை மிதியடி கற்களை மாற்றி தார் சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அதை செய்யவில்லை.

 

    மாறாக நுழைவாயில் அருகே வாகனங்களில் வேகத்தை குறைப்பதாக நினைத்து வியாழக்கிழமை நள்ளிரவில் 2 அடி உயரத்திற்கு சிமென்ட் கான்கிரீட் மூலம் வேகத்தடை அமைத்துள்ளனர். வேகத்தடை அமைத்து சில மணி நேரத்திற்குள் நோயாளிகளை பார்க்க மோட்டார் சைக்கிள்களில் சென்ற உறவினர்கள் வேகத்தடையில் சிக்கி கீழே விழுந்து சுமார் 15 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 

    நோயாளிகளை குனமாக்க தான் மருத்துவமனை ஆனால் புதுக்கோட்டையில் மட்டும் தான் நல்லா வருபவர்களையும் மண்டையை உடைத்து நோயாளிகளாக உள்ளே அனுப்பி சிகிச்சை கொடுக்கிறார்கள். 

 

    மேலும் ஆட்டோக்கள், பேருந்துகள் கூட அந்த வேகத்தடையில் ஏறிச் செல்ல முடியாமல் அடிப்பகுதியை உடைத்துக் கொண்டு சென்றார்கள். இந்த சம்பவங்களுக்கு பிறகு வேகத்தடையை உடைக்க திட்டமிட்டுள்ளார்களாம். இத்தனை செலவுகள் செய்வதற்கு தரைமிதியடி கற்களை மாற்றி தார் சாலை அமைத்துவிட்டால் விபத்துகளை தடுக்கலாம் தானே..?
        
 

சார்ந்த செய்திகள்

Next Story

விசாரணைக் கைதி மரணம்; சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
madurai youth karthi incident Relatives involved in the road block

மதுரை மாவட்டம் மதிச்சியம் என்ற பகுதியில் கார்த்திக் (வயது 30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தார். இத்தகைய சூழலில் வழிப்பறி வழக்கில் தொடர்பு இருப்பதாகவும், தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் போலீசாரால் கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் 3 ஆம் தேதி நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, மருத்துவ தகுதிச் சான்று வழங்கப்பட்ட பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து 4 ஆம் தேதி திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அதிகாலை உயிரிழந்தார்.

கைது செய்யப்பட்ட ஒரே நாளில் சிறையில் இருந்து உடல் நலக்குறைவால் விசாரணை சிறைக்கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. மேலும் கார்த்திக் உயிரிழப்புக்கு காவல்துறையினரே காரணம் என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். 

madurai youth karthi incident Relatives involved in the road block

இந்நிலையில் இளைஞரின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறியும், உரிய நிவாரணம் அளிக்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே இன்று (07.04.2024) சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். 

Next Story

உயிரற்ற சடலங்களுக்கு இவ்வளவு மதிப்பா? மாற்றி யோசித்த கேரள அரசு!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Kerala earned revenue by selling corpses

கேரளாவில் அரசு மருத்துவமனைகளில், பிணவறையில் கேட்பாரற்றுக் கிடந்த சடலங்களை விற்றதன் மூலம் கேரள அரசு 3 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் கேட்பாரற்று கிடந்த சடலங்களை 2008 ஆம் ஆண்டு முதல் கேரளா அரசு விற்பனை செய்துள்ளது. மொத்தமாக 1,122 சடலங்களை தனியார் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது. மருத்துவ மாணவர்களுக்கு நேரடி பயிற்சி அளிக்க மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாதிரிகளாக வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் மட்டும் அதிகபட்சமாக கடந்த 11 ஆண்டுகளில் கேட்பாரற்ற 599 சடலங்களை மருத்துவக் கல்லூரிகளுக்கு கேரள அரசு வழங்கியுள்ளது.

பதப்படுத்தி வைக்கப்பட்ட சடலம் ஒன்றுக்கு 40,000 ரூபாயும், பதப்படுத்தப்படாத சடலம் ஒன்றுக்கு 20,000 ரூபாயும் என கேரள அரசு வசூலித்துள்ளது. இதில் மொத்தமாக  3.66 கோடி ரூபாய் கேரள அரசு வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.